search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண மோசடி
    X
    பண மோசடி

    ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி - பெண் கைது

    பிரபல ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக பெண்ணை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவள்ளி அருகே உள்ள கிழக்கு ராஜாராம் நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 33).

    இவரிடம் பிரபல ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் வாங்கிவிட்டு 3 பேர் ஏமாற்றிவிட்டனர். பணத்தை திரும்ப கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து லட்சுமணன் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சையது பாட்சா வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, மத்திகிரியை அடுத்த இடையநல்லூர் கிராமத்தை சேர்ந்த சொர்ணலட்சுமி (44) என்பவரை கைது செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சொர்ணலட்சுமியின் கணவர் ரஜினிகாந்த், பவுன்குமார் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×