என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அ.தி.மு.க.- தி.மு.க.வினருடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது- தொண்டர்களுக்கு தினகரன் அறிவுரை
அம்பத்தூர்:
திருவள்ளூர் மத்திய மாவட்ட அமமுக சார்பில் அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., ரஜினி மக்கள் மன்றம் ஆகிய மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் அமமுகவில் இணையும் விழா வேலப்பன்சாவடியில் மாவட்ட செயலாளர் இ.லக்கி முருகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி. வி.தினகரன் முன்னிலையில் மாற்று கட்சியை சேர்ந்த 2 ஆயிரம் பேர் அ.ம.மு.க.வில் இனைந்தனர். நிகழ்ச்சியில் சிங்கம் உருவ சிலை, வீரவாள், ஜெயலலிதா உருவ சிலை தினகரனுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-
ஜெயலலிதா நம்மோடு இல்லை என்றாலும் அவருடைய திருவுருவத்தையும், திருப்பெயரையும், கொள்கைகளையும் தாங்கியிருக்கிற இயக்கமாக அ.ம.மு.க. செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஜெயலலிதாவையும், அவருடைய கொள்கையையும் மறந்து விட்டார்கள். அவர் வகுத்து தந்த பாதையை விட்டு கட்சியையும், ஆட்சியையும் வேறு திசையில் அழைத்துச் செல்கிறார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
பாராளுமன்றத் தேர்தலில் நாம் தோல்வியுற்றாலும் அதற்குப் பிறகு இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நிர்வாகிகள் சிலர் விலகி செல்கிறார்கள்.
சிலர் இந்த இயக்கத்தை விட்டு சென்றிருக்கலாம் அவர்கள் சென்றதால் இந்த இயக்கத்திற்கு பாதிப்பு இல்லை. பதவியில் இருந்தவர்கள் சென்றார்கள். உண்மையான தொண்டர்கள் இங்குதான் இருக்கிறார்கள்.
தி.மு.க.- அ.தி.மு.க. வினரோடு தொண்டர்கள் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். தி.மு.க.நமக்கு எதிர்க் கட்சி, அ.தி.மு.க. துரோகி எதிரியை போல் துரோகிகளையும் ஒரு கை பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பொருளாளர் பி.வெற்றிவேல், சி.ஆர். சரஸ்வதி, சவுந்தர் ராஜன், அம்பத்தூர் பகுதிகாக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ். வேதாசலம், பொன்னேரி பொன்ராஜா, ஆவடி எஸ்.கே.எஸ். மூர்த்தி, மதுரவாயல், தியாகராஜன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் நசிர்கான், இளைஞரனி செயலாளர் கராத்தே பாண்டியன், பேரவை இனை செயலாளர் வழக்கறிஞர் பிரேம்குமார், இளைஞரணி இனை செயலாளர் கார்த்திகேயன், டாக்டர் சேரல் கண்ணன், சுப்புராமன், பாபு, சசிதரன், மணி, வெங்கடேசன், விஸ்வநாதன் அசோக்குமார், வீரப்பன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்