search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு முட்டுக்கட்டை- சீமான் கண்டனம்
    X

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு முட்டுக்கட்டை- சீமான் கண்டனம்

    கோயில் சிலைகளை மீட்கும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரின் முயற்சிக்கு தமிழக அரசு முட்டுக்கட்டைப் போடுவதா? என்று சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தள்ளார். #Seeman #IdolSmuggling #PonManickavel
    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவினர் 60 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சைப் பெரிய கோயிலில் காணாமல் போன பல நூறு ஆண்டுகள் பழமையான ராஜராஜசோழன், உலக மாதேவியின் சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.

    சைதாப்பேட்டையிலுள்ள ரன்வீர்ஷா என்பவரது வீட்டில் சிலைகள், கோயில் தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சிலைகளை அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு இடமில்லை என்றும், சிலைகளை எடுத்துச்செல்ல அரசு சார்பாக எந்தப் பொருளாதார உதவியும் செய்யப்பட மாட்டாது எனவும் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. எனவே தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். #NaamTamilarKatchi #Seeman #IdolSmuggling #PonManickavel
    Next Story
    ×