என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தல் அதிகாரியை தாக்கிய விவகாரம்: மு.க.அழகிரி மீதான வழக்கு ஒத்திவைப்பு
Byமாலை மலர்8 Jun 2018 7:34 AM GMT (Updated: 8 Jun 2018 7:34 AM GMT)
மேலூர் அருகே தேர்தல் பிரசாரத்தின் போது அதிகாரியை தாக்கியதாக மு.க.அழகிரி மீதான வழக்கு விசாரணை ஆகஸ்டு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலூர்:
கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மேலூர் அருகே வெள்ளலூரில் உள்ள ஏழை காத்தஅம்மன் கோவில் அருகில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி மற்றும் தி.மு.க.வினர் ஓட்டு சேகரித்தனர்.
அப்போது அங்கு தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய காளிமுத்து தன்னை மு.க.அழகிரி, முன்னாள் துணைமேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்ட தி.மு.க.வினர் தாக்கியதாக கீழவளவு போலீசில் புகார் செய்தார்.
இந்த வழக்கு மேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று நீதிபதி பழனிகுமார் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 12 பேர் ஆஜரானார்கள். மு.க.அழகிரி, பி.எம்.மன்னன் உள்ளிட்ட 9 பேர் ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து நீதிபதி பழனிகுமார் வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்டு மாதம் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மேலூர் அருகே வெள்ளலூரில் உள்ள ஏழை காத்தஅம்மன் கோவில் அருகில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி மற்றும் தி.மு.க.வினர் ஓட்டு சேகரித்தனர்.
அப்போது அங்கு தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய காளிமுத்து தன்னை மு.க.அழகிரி, முன்னாள் துணைமேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்ட தி.மு.க.வினர் தாக்கியதாக கீழவளவு போலீசில் புகார் செய்தார்.
இந்த வழக்கு மேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று நீதிபதி பழனிகுமார் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 12 பேர் ஆஜரானார்கள். மு.க.அழகிரி, பி.எம்.மன்னன் உள்ளிட்ட 9 பேர் ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து நீதிபதி பழனிகுமார் வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்டு மாதம் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X