என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவை அரவிந்தர் ஆசிரமத்துக்கு பிரதமர் மோடி வருவதற்கு எதிர்ப்பு
Byமாலை மலர்24 Feb 2018 4:07 AM GMT (Updated: 24 Feb 2018 4:07 AM GMT)
புதுவை வரும் பிரதமர் நரேந்திர மோடி அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட வந்தால் குடும்பத்தினருடன் தற்கொலை செய்வோம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பீகாரிலிருந்து பிரிந்த ஜார்கண்ட் பொகாரா பகுதியை சேர்ந்த ஹேமலதா பிரசாத், அவரது சகோதரிகள் ஜெயஸ்ரீபிரசாத், அருணஸ்ரீ பிரசாத், ராஜ்யஸ்ரீபிரசாத், நிவேதிதா பிரசாத் ஆகியோர் தங்கி இருந்தனர்.
கடந்த 2002-ம் ஆண்டு ஹேமலதா பிரசாத்தின் மீது ஆசிரம நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து ஆசிரமத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டது. இதனையடுத்து ஹேமலதா உள்ளிட்ட 5 சகோதரிகளும் சேர்ந்து ஆசிரம நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். மேலும் ஆசிரம நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணையின் முடிவில் உச்சநீதிமன்றம் 5 சகோதரிகளும் ஆசிரமத்தை காலி செய்ய வேண்டும் என காலஅவகாசம் அளித்து உத்தரவிட்டது. காலி செய்யும்வரை ஆசிரம விதிகளை பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இந்நிலையில் 5 சகோதரிகளும் ஆசிரமத்தை விட்டு வெளியேறாமல் இருந்தனர்.
இதற்கிடையே குருசுக்குப்பத்தில் உள்ள ஆசிரம விடுதியில் இருந்து 5 சகோதரிகளையும் வெளியேற்ற ஆசிரம நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
அதைத்தொடர்ந்து 5 சகோதரிகளும் அவர்களது தந்தை பிரசாத், தாய் சாந்திதேவியுடன் கடந்த 2004 டிசம்பரில் ஆசிரமத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதனை எதிர்த்து சகோதரிகள் தற்கொலை முயற்சியில் இறங்கினர்.
கடந்த 18.12.2014 அதிகாலை 4 மணிக்கு சகோதரிகள் ஹேமலதா, அருணாஸ்ரீ, நிவேதிதா, ஜெயஸ்ரீ, ராஜ்யஸ்ரீ தங்களின் பெற்றோர் பிரசாத், சாந்திதேவியுடன் கூட்டாக காலாப்பட்டுக்கு சென்று கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.
இதில் அருணஸ்ரீ (52), ராஜ்யஸ்ரீ (48), தாயார் சாந்திதேவி (78) ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். கடலில் தத்தளித்த மற்ற சகோதரிகளான நிவேதிதா, ஹேமலதா, ஜெயஸ்ரீ, தந்தை பிரசாத் ஆகியோரை மீனவர்கள் மீட்டனர்.
தற்போது புதுவையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வரு கின்றனர். இந்நிலையில் தனது தாய் மற்றும் 2 சகோதரிகள் இறப்புக்கு காரணமான அரவிந்தர் ஆசிரம நிர்வாகத்தின் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவில் ஹேமலதா புகார் செய்தார். ஆனால், இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தங்கும் இடம் உணவு உள்ளிட்டவை ஆசிரம நிர்வாகம் வழங்கவில்லை என சகோதரிகள் புகார் கூறினர். இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை ( ஞாயிற்றுக்கிழமை) ஆசிரமத்தை பார்வையிட வருகிறார். இதற்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹேமலதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஆசிரமத்தை பார்வையிட வந்தால் குடும்பத்தினருடன் தற்கொலை செய்வோம் என மிரட்டல் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
ஆசிரம நிர்வாகம் மீது பல புகார்கள் அளித்தும் அரசும், அதிகாரிகளும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆசிரமம் வந்து பார்வையிட உள்ளார். இதை எதிர்க்கிறோம். பல்வேறு புகார்கள் ஆசிரம நிர்வாகிகள் மீது உள்ள நிலையில் பிரதமர் அங்கு வந்து பார்வையிட்டால் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. பிரதமர் ஆசிரமம் வரக்கூடாது. எங்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். பிரதமர் வந்து பார்வையிட்டால் தற்கொலை செய்து கொள்வோம்.
இவ்வாறு ஹேமலதா கூறினார். #Tamilnews
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பீகாரிலிருந்து பிரிந்த ஜார்கண்ட் பொகாரா பகுதியை சேர்ந்த ஹேமலதா பிரசாத், அவரது சகோதரிகள் ஜெயஸ்ரீபிரசாத், அருணஸ்ரீ பிரசாத், ராஜ்யஸ்ரீபிரசாத், நிவேதிதா பிரசாத் ஆகியோர் தங்கி இருந்தனர்.
கடந்த 2002-ம் ஆண்டு ஹேமலதா பிரசாத்தின் மீது ஆசிரம நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து ஆசிரமத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டது. இதனையடுத்து ஹேமலதா உள்ளிட்ட 5 சகோதரிகளும் சேர்ந்து ஆசிரம நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். மேலும் ஆசிரம நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணையின் முடிவில் உச்சநீதிமன்றம் 5 சகோதரிகளும் ஆசிரமத்தை காலி செய்ய வேண்டும் என காலஅவகாசம் அளித்து உத்தரவிட்டது. காலி செய்யும்வரை ஆசிரம விதிகளை பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இந்நிலையில் 5 சகோதரிகளும் ஆசிரமத்தை விட்டு வெளியேறாமல் இருந்தனர்.
இதற்கிடையே குருசுக்குப்பத்தில் உள்ள ஆசிரம விடுதியில் இருந்து 5 சகோதரிகளையும் வெளியேற்ற ஆசிரம நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
அதைத்தொடர்ந்து 5 சகோதரிகளும் அவர்களது தந்தை பிரசாத், தாய் சாந்திதேவியுடன் கடந்த 2004 டிசம்பரில் ஆசிரமத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதனை எதிர்த்து சகோதரிகள் தற்கொலை முயற்சியில் இறங்கினர்.
கடந்த 18.12.2014 அதிகாலை 4 மணிக்கு சகோதரிகள் ஹேமலதா, அருணாஸ்ரீ, நிவேதிதா, ஜெயஸ்ரீ, ராஜ்யஸ்ரீ தங்களின் பெற்றோர் பிரசாத், சாந்திதேவியுடன் கூட்டாக காலாப்பட்டுக்கு சென்று கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.
இதில் அருணஸ்ரீ (52), ராஜ்யஸ்ரீ (48), தாயார் சாந்திதேவி (78) ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். கடலில் தத்தளித்த மற்ற சகோதரிகளான நிவேதிதா, ஹேமலதா, ஜெயஸ்ரீ, தந்தை பிரசாத் ஆகியோரை மீனவர்கள் மீட்டனர்.
தற்போது புதுவையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வரு கின்றனர். இந்நிலையில் தனது தாய் மற்றும் 2 சகோதரிகள் இறப்புக்கு காரணமான அரவிந்தர் ஆசிரம நிர்வாகத்தின் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவில் ஹேமலதா புகார் செய்தார். ஆனால், இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தங்கும் இடம் உணவு உள்ளிட்டவை ஆசிரம நிர்வாகம் வழங்கவில்லை என சகோதரிகள் புகார் கூறினர். இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை ( ஞாயிற்றுக்கிழமை) ஆசிரமத்தை பார்வையிட வருகிறார். இதற்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹேமலதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஆசிரமத்தை பார்வையிட வந்தால் குடும்பத்தினருடன் தற்கொலை செய்வோம் என மிரட்டல் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
ஆசிரம நிர்வாகம் மீது பல புகார்கள் அளித்தும் அரசும், அதிகாரிகளும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆசிரமம் வந்து பார்வையிட உள்ளார். இதை எதிர்க்கிறோம். பல்வேறு புகார்கள் ஆசிரம நிர்வாகிகள் மீது உள்ள நிலையில் பிரதமர் அங்கு வந்து பார்வையிட்டால் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. பிரதமர் ஆசிரமம் வரக்கூடாது. எங்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். பிரதமர் வந்து பார்வையிட்டால் தற்கொலை செய்து கொள்வோம்.
இவ்வாறு ஹேமலதா கூறினார். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X