search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இந்தியா
    X

    ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இந்தியா

    ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. #IndiaVsPakistan #WomensAsiaCupT20Final
    கோலாலம்பூர்:

    ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் விக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், மலேசியா, தாய்லாந்து, ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

    இப்போட்டி தொடரில் இன்று கடைசி லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 72 ரன் எடுத்தது. இந்திய தரப்பில் எக்தா பிஸ்ட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    அடுத்து 73 ரன் இலங்கை விளையாடிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 5 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது. மிதாலிராஜ், தீப்தி சர்மா டக் அவுட் ஆனார்கள்.

    அதன்பின் ஜோடி சேர்ந்த மந்தனா- ஹர்மன்பிரித் கவூர் சிறப்பாக விளையாடிய ரன் சேர்த்தனர். மந்தனா 38 ரன் எடுத்து அவுட் ஆனார். இந்திய அணி 16.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 75 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    இதன்மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா 5 ஆட்டத்தில் 4 வெற்றி, 1 தோல்வி என 8 புள்ளியுடன் முதல் இடத்தை பிடித்தது.

    மற்றொரு ஆட்டத்தில் தாய்லாந்து அணியிடம் இலங்கை அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது.

    வங்காளதேசம்- மலேசியா இடையேயான ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு நுழையும். ஒரு வேளை வங்காளதேசம் தோல்வி அடைந்தால் 6 புள்ளியுடன் பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். #IndiaVsPakistan #WomensAsiaCupT20Final
    Next Story
    ×