search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வேட்புமனு தாக்கல் செய்ய ராகுல் காந்தி ஏப்.3-ந்தேதி கேரளாவுக்கு வருகை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வேட்புமனு தாக்கல் செய்ய ராகுல் காந்தி ஏப்.3-ந்தேதி கேரளாவுக்கு வருகை

    • ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் ரோடு-ஷோ செல்கிறார்.
    • ராகுல்காந்தி வருகை அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும் ராகுல்காந்தி இன்றும் வரவில்லை. இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இருந்தபோதிலும் ராகுல் காந்தி எப்போது வருவார்? என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் ராகுல்காந்தி வருகிற ஏப்ரல் 3-ந்தேதி கேரளா வருகிறார். அவர் அன்றைய தினம் மதியம் 12 மணியளவில் கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

    அதனைத்தொடர்ந்து ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் ரோடு-ஷோ செல்கிறார். அதன்பிறகு அவர் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் பிரசாரத்துக்காக கேரளாவில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 26-ந்தேதிக்கு முந்தைய நாட்களில் கேரளாவுக்கு மீண்டும் வருகிறார். அப்போது அவர் வயநாடு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    ராகுல்காந்தி வருகை அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராகுல்காந்தியை வரவேற்க தயாராகி வரும் காங்கிரஸ் நிர்வாகிகள், அவரது பிரசார பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ராகுல்காந்தியும் பிரசாரத்துக்கு வந்துவிடும் பட்சத்தில், வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×