search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது
    X

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது

    • நாளை மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
    • புதிய பாராளுமன்றத்தில் நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இதுவாகும்.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் ஜனாதிபதி உரையுடன் தொடங்குவது வழக்கம்.

    இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

    ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி வருகிறார்.

    முன்னதாக, பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வரவேற்றனர்.

    Next Story
    ×