search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சத்திய பாதையை மீறாததால் சிறை தண்டனை அனுபவிக்கிறார் சிசோடியா: கெஜ்ரிவால் உருக்கம்
    X

    சத்திய பாதையை மீறாததால் சிறை தண்டனை அனுபவிக்கிறார் சிசோடியா: கெஜ்ரிவால் உருக்கம்

    • மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிந்துள்ளது.
    • இந்த ஒரு வருடத்தில் அரசால் ஒரு ஆதாரத்தை கூட கோர்ட்டில் சமர்ப்பிக்க முடியவில்லை.

    புதுடெல்லி:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மத்திய அரசு மணீஷ் சிசோடியாவை பொய் வழக்கில் கைது செய்தது. அவர் கைது செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிந்துள்ளது. இந்த ஒரு வருடத்தில் அரசால் ஒரு ஆதாரத்தை கூட கோர்ட்டில் சமர்ப்பிக்க முடியவில்லை. இது பொய் வழக்கு.

    75 ஆண்டுக்குப் பிறகு மணீஷ் சிசோடியா ஏழைகளின் குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் பிரகாசமான எதிர்காலம் பற்றிய நம்பிக்கையைக் கொண்டு வந்தார். ஏழைகளின் குழந்தைகளுக்கு கனவு காணும் உரிமையை அவர் வழங்கினார். அப்படிப்பட்ட மனிதரை பொய் வழக்கில் சிறையில் அடைத்துள்ளனர்.

    அவர் எங்களுக்கு முன் மாதிரியாக உள்ளார். பா.ஜ.க.வில் இணைந்திருந்தால் அவர் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டிருக்கும். ஆனால் அவர் சத்தியத்தின் பாதையை விடவில்லை என தெரிவித்தார்.

    Next Story
    ×