search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமித்ஷா
    X
    வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமித்ஷா

    இந்தியாவின் எதிர்காலத்தை முடிவு செய்வதே உத்தர பிரதேச தேர்தல் - அமித்ஷா

    வாக்கு வங்கியைப் பற்றி கவலைப்படாமல் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் பா.ஜ.க. அரசு செயல்பட்டு இருக்கிறது என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.

    இதற்கிடையே, பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து மத்திய மந்திரிகள் பலரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கியமாக உள்துறை மந்திரியும், பா.ஜ.க. முன்னாள் தலைவருமான அமித்ஷாவும் வாக்கு சேகரிப்பில் உள்ளார்.

    இந்நிலையில், மதுராவின் பிராஜ் பகுதியில் நேற்று வாக்காளர்கள் மத்தியில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசம் வளர்ச்சி அடையவில்லை என்றால் ஒட்டுமொத்த இந்தியாவும் பின்தங்கும். 
    எனவே, உத்தர பிரதேச தேர்தல் இந்தியாவின் எதிர்காலத்தை முடிவு செய்யும் தேர்தல் ஆகும்.

    சமாஜ்வாதி ஒரு இனத்தினருக்காகவும், பகுஜன் சமாஜ் மற்றொரு இனத்தினருக்காகவும் பணியாற்றி இருக்கின்றன. ஆனால் முதல்முறையாக உத்தர பிரதேசத்தில் ஒட்டுமொத்த அளவில் வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன. இதன்மூலம் எந்தக் கட்சி அல்லது தத்துவம் மாநிலத்துக்கு தேவை என்பதை இந்த தேர்தல் சொல்லும்.

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என பா.ஜனதா எப்போதும் அறிவுறுத்தி வந்தது. ஒட்டுமொத்த தேசமும் அதை ஏற்றுக் கொண்டது.

    மத்தியில் கடந்த ஏழரை ஆண்டுகளாக மோடி அரசு பதவியில் இருக்கிறது. இந்த அரசு மீது ராகுல் காந்தியால் கூட ஊழல் குற்றச்சாட்டு கூறமுடியாது.

    உத்தர பிரதேசத்திலும் அகிலேஷ் யாதவ் தொடர்பான நபர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் மாநிலத்தில் 5 ஆண்டுகளாக இருக்கும் யோகி ஆதித்யநாத் அரசு மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. எனவே வரும் தேர்தலிலும் பா.ஜ.க.வை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

    Next Story
    ×