என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை 50 சதவீதம் குறைக்க முடிவு?
Byமாலை மலர்8 Dec 2021 4:58 AM GMT (Updated: 8 Dec 2021 6:33 AM GMT)
ஒவ்வொரு மாதமும் கோவிஷீல்டு தடுப்பூசி 250-ல் இருந்து 275 மில்லியன் டோஸ்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
புதுடெல்லி:
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2-வது அலையின்போது ஏராளமானோர் இறந்தனர்.
இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியது.
இதனால் கொரோனா உயிரிழப்புகளும், பரவலும் கட்டுக்குள் வந்தது. கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.
இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை 50 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வாங்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவாலா கூறியதாவது:-
ஒவ்வொரு மாதமும் கோவிஷீல்டு தடுப்பூசி 250-ல் இருந்து 275 மில்லியன் டோஸ்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஆயுட்காலம் 9 மாதங்கள் ஆகும். கோவிஷீல்டுக்கான தேவையைவிட சப்ளை அதிகமாக இருப்பதால் உற்பத்தியை குறைக்க முடிவு செய்தோம்.
மத்திய அரசு ஏற்கனவே கொடுத்துள்ள ஆர்டர்கள் அடுத்த வாரத்துடன் முடிவடைகிறது. மீண்டும் ஆர்டர் வராததால் உற்பத்தியை பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளோம்.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2-வது அலையின்போது ஏராளமானோர் இறந்தனர்.
இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியது.
இதனால் கொரோனா உயிரிழப்புகளும், பரவலும் கட்டுக்குள் வந்தது. கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.
இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை 50 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வாங்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவாலா கூறியதாவது:-
ஒவ்வொரு மாதமும் கோவிஷீல்டு தடுப்பூசி 250-ல் இருந்து 275 மில்லியன் டோஸ்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஆயுட்காலம் 9 மாதங்கள் ஆகும். கோவிஷீல்டுக்கான தேவையைவிட சப்ளை அதிகமாக இருப்பதால் உற்பத்தியை குறைக்க முடிவு செய்தோம்.
மத்திய அரசு ஏற்கனவே கொடுத்துள்ள ஆர்டர்கள் அடுத்த வாரத்துடன் முடிவடைகிறது. மீண்டும் ஆர்டர் வராததால் உற்பத்தியை பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளோம்.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X