search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 555 நாட்களில் இல்லாத அளவில் சரிவு

    கொரோனா பாதிப்பால் கேரளாவில் 134 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 195 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,73,952 ஆக அதிகரித்துள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

    அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,439 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,656 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 56 ஆயிரத்து 822 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பால் கேரளாவில் 134 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 195 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,73,952 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனாவின் பிடியில் இருந்து மேலும் ஒரே நாளில் 9,525 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 89 ஆயிரத்து 137 ஆக உயர்ந்தது.

    ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை கடந்த 555 நாட்களில் இல்லாத அளவில் 93,733 ஆக குறைந்துள்ளது.

    தடுப்பூசி


    நாடு முழுவதும் நேற்று 73,62,000 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 129 கோடியே 54 லட்சத்தை கடந்துள்ளது.

    இதற்கிடையே நேற்று 12,13,130 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 65 கோடியே 6 லட்சத்தை கடந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.



    Next Story
    ×