என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடி நேரடியாக வந்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்- அடம்பிடித்து மறுத்த கிராமவாசி
Byமாலை மலர்27 Sep 2021 4:47 AM GMT (Updated: 27 Sep 2021 4:47 AM GMT)
கிராமவாசியை மீண்டும் அணுகி, அவரையும், அவரது மனைவியையும் தடுப்பூசி போடுவதற்கு சம்மதிக்க வைப்போம் என்று மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.
போபால்:
மத்தியபிரதேச மாநில அரசு, கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி இருக்கிறது. அங்கு கிராமந்தோறும் சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துகின்றனர். மாநிலத்தில் அனைவருக்கும் முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போட்டு முடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தார் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமமான கிக்கார்வாசுக்கு, ஒரு தடுப்பூசி போடும் சுகாதார குழுவினர் நேற்று முன்தினம் சென்றனர்.
கிராமத்தினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்ட நிலையில், ஒரு கிராமவாசி மட்டும் தனது மனைவியுடன் அதற்கு மறுத்துவிட்டார்.
அப்போது அவரிடம், ‘யார் வந்தால் நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வீர்கள்?’ என்று சுகாதார குழுவினர் கேட்டனர்.
அதற்கு அந்நபர் ஆரம்பத்தில், ‘ஒரு மூத்த அதிகாரி வந்தால் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’ என்றார்.
எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் ஒப்புக்கொள்ளாததால் சுகாதார குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டனர். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இந்நிலையில், அந்த கிராமவாசியை மீண்டும் அணுகி, அவரையும், அவரது மனைவியையும் தடுப்பூசி போடுவதற்கு சம்மதிக்க வைப்போம் என்று மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மத்தியபிரதேச மாநில அரசு, கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி இருக்கிறது. அங்கு கிராமந்தோறும் சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துகின்றனர். மாநிலத்தில் அனைவருக்கும் முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போட்டு முடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தார் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமமான கிக்கார்வாசுக்கு, ஒரு தடுப்பூசி போடும் சுகாதார குழுவினர் நேற்று முன்தினம் சென்றனர்.
கிராமத்தினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்ட நிலையில், ஒரு கிராமவாசி மட்டும் தனது மனைவியுடன் அதற்கு மறுத்துவிட்டார்.
அப்போது அவரிடம், ‘யார் வந்தால் நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வீர்கள்?’ என்று சுகாதார குழுவினர் கேட்டனர்.
அதற்கு அந்நபர் ஆரம்பத்தில், ‘ஒரு மூத்த அதிகாரி வந்தால் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’ என்றார்.
‘துணைக் கோட்ட மாஜிஸ்திரேட்டு வந்தால் தடுப்பூசி போட்டுக்கொள்வீர்களா?’ என்று குழுவினர் கேட்டபோது, ‘துணைக் கோட்ட மாஜிஸ்திரேட்டிடம் சொல்லி பிரதமர் மோடியை அழையுங்கள். அவர் இங்கு வந்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’ என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.
எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் ஒப்புக்கொள்ளாததால் சுகாதார குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டனர். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இந்நிலையில், அந்த கிராமவாசியை மீண்டும் அணுகி, அவரையும், அவரது மனைவியையும் தடுப்பூசி போடுவதற்கு சம்மதிக்க வைப்போம் என்று மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் பிரதமர் மோடி நேரடியாக வராமல் அவர் அதற்கு ஒப்புக்கொள்வாரா என்பது சந்தேகம்தான்!
இதையும் படியுங்கள்...நாங்கள் எந்த கட்சியையும் உடைக்க மாட்டோம்: டி.கே.சிவக்குமார்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X