search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ’வேளாண் சட்டங்களை 1 வருடம் வரை நிறுத்தி வைக்க தயார்’ - மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர்

    வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் 6 மாதம் முதல் 1 வருடம் வரை நிறுத்தி வைக்க தயார் என விவசாய சங்க பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 57-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஏற்கனவே 9 கட்டங்களாக பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்தது. ஆனால், அனைத்து கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

    இந்நிலையில், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு இடையே இன்று 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை முற்றிலும் திரும்பப்பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    ஆனால், வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாகவும், ஒரு குழு அமைத்து விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் யோசனை தெரிவித்துள்ளார்.

    மேலும், போராட்டத்தை கைவிடுவது குறித்து விவசாயிகள் இன்றே முடிவு எடுக்க வேண்டும் என மந்திரி தோமர் தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய மந்திரியின் யோசனை குறித்து விவசாயிகள் தற்போதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால், 10-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×