என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்தது ஏன்? - சிவசேனா கேள்வி
Byமாலை மலர்21 Dec 2020 12:19 AM GMT (Updated: 21 Dec 2020 12:19 AM GMT)
விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்விகள், விவாதங்களை தவிர்க்கவே குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள 3 வேளாண் சட்டங்களையும் திருமப் பெற வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்விகள், விவாதங்களை தவிர்க்கவே குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது:
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். அந்தப் போராட்டம் குறித்துக் கேள்விகள், விவாதங்கள் எழும் என்பதாலேயே மத்திய அரசு பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்த விருப்பமில்லாமல் ரத்து செய்துள்ளது என தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X