என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நான் நள்ளிரவில் எடியூரப்பாவை சந்திக்கிறேனா?: குமாரசாமிக்கு, டி.கே.சிவக்குமார் பதில்
Byமாலை மலர்10 Dec 2020 4:08 AM GMT (Updated: 10 Dec 2020 4:08 AM GMT)
எடியூரப்பாவையோ அல்லது மந்திரிகளையோ நள்ளிரவில் சந்தித்து எனது சொந்த வேலைகளை முடித்து கொண்டதற்கான ஆதாரங்களை வெளியிட்டால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று கூறியுள்ளார்.
பெங்களூரு :
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நான் நள்ளிரவில் சென்று முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து சொந்த வேலைகளை முடித்துக் கொள்வதாக குமாரசாமி கூறியுள்ளார். முதல்-மந்திரி எடியூரப்பாவையோ அல்லது மந்திரிகளையோ நள்ளிரவில் சந்தித்து எனது சொந்த வேலைகளை முடித்து கொண்டதற்கான ஆதாரங்களை வெளியிட்டால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்.
குமாரசாமி என்னை 30 ஆண்டுகளாக பார்த்து வருகிறார். எனது போராட்டம் எத்தகையது என்பது அவருக்கு தெரியும். அவருக்கு கீழ் நான் பணியாற்றி இருக்கிறேன். அவரை மதிக்கிறேன். அவருக்கு அரசியல் ரீதியான பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் எனக்கு அத்தகைய எந்த பிரச்சினையும் இல்லை. நான் காங்கிரஸ் கட்சியின் தலைவர்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X