search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜேபி நட்டா
    X
    ஜேபி நட்டா

    கொரோனா விவகாரத்தில் பிரதமர் மோடி துணிச்சலான நடவடிக்கை எடுத்தார் - ஜேபி நட்டா

    கொரோனா விவகாரத்தில் பிரதமர் மோடி துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தார் என பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் மோடி திறம்பட செய்து வருவதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

    உத்தரகாண்டில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாவது:

    அமெரிக்காவில் கொரோனாவை கையாள்வதில் அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வகம் தோல்வி அடைந்துள்ளது. இதனால், அதிபர் தேர்தலிலும் டிரம்ப் தோல்வி அடைந்தார்.

    ஆனால், ஊரடங்கு என்ற துணிச்சலான நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்தார். சுகாதாரம் மற்றும் பொருளாதார ரீதியாக அமெரிக்கா இன்னும் தடுமாறி வருகிறது. ஆனால் இந்தியாவில், நாம் அத்தகைய நிலையற்ற தன்மையிலிருந்து மீண்டு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×