என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிகள் திறப்பு குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்: எடியூரப்பா
Byமாலை மலர்10 Oct 2020 2:21 AM GMT (Updated: 10 Oct 2020 2:21 AM GMT)
கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பெற்றோருக்கு எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு :
கர்நாடகத்தில் வருகிற 15-ந் தேதிக்கு மேல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகி வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் பள்ளிகள் திறப்பு குறித்த தகவல் குழந்தைகளின் பெற்றோரை ஆதங்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக அரசும், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து ஒரு தெளிவான தகவலை இதுவரை வெளியிடவில்லை. இதனால் பெற்றோர் குழப்பத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளை திறப்பது குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து ஊடகங்களும் விவாதங்கள் நடத்தி வருவதை கவனித்துள்ளேன். எதிர்க்கட்சி தலைவர்களும் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மற்றும் எதிர்கால நலன் கருதி, பள்ளிகளை திறப்பதற்கு முன்பு அனைத்துக்கட்சிகளின் தலைவர்கள், கல்வித்துறை நிபுணர்கள், மூத்த அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி சாதக-பாதகங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். அதன்பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். அதுவரை பள்ளிகளை திறப்பது குறித்து வெளியாகும் வதந்திகளை பெற்றோர் நம்ப வேண்டாம்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் வருகிற 15-ந் தேதிக்கு மேல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகி வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் பள்ளிகள் திறப்பு குறித்த தகவல் குழந்தைகளின் பெற்றோரை ஆதங்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக அரசும், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து ஒரு தெளிவான தகவலை இதுவரை வெளியிடவில்லை. இதனால் பெற்றோர் குழப்பத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளை திறப்பது குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து ஊடகங்களும் விவாதங்கள் நடத்தி வருவதை கவனித்துள்ளேன். எதிர்க்கட்சி தலைவர்களும் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மற்றும் எதிர்கால நலன் கருதி, பள்ளிகளை திறப்பதற்கு முன்பு அனைத்துக்கட்சிகளின் தலைவர்கள், கல்வித்துறை நிபுணர்கள், மூத்த அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி சாதக-பாதகங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். அதன்பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். அதுவரை பள்ளிகளை திறப்பது குறித்து வெளியாகும் வதந்திகளை பெற்றோர் நம்ப வேண்டாம்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X