என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர்கள் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
Byமாலை மலர்17 Sep 2020 1:28 AM GMT (Updated: 17 Sep 2020 1:28 AM GMT)
பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர் அசோக்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சண்டிகார்:
பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர் அசோக்குமார். ஒப்பந்ததாரர். இவரது மனைவி ஆஷாராணி. இவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் பதன்கோட் அருகேவுள்ள தார்யால் என்ற கிராமத்தில் வசித்து வந்தனர். கடந்த மாதம் (ஆகஸ்டு) 19-ந் தேதி நள்ளிரவில் இவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அசோக்குமார், ஆஷாராணி மற்றும் அவர்களது மகன் கவுசல் ஆகியோரை கடுமையாக தாக்கினர். இதில் அசோக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கவுசல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 31-ந் தேதி உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஷாராணி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க துபாய் சென்றிருந்த சுரேஷ் ரெய்னா உறவினர்கள் இறந்ததால் இந்தியா திரும்பி பதன்கோட் வந்தார். சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க பஞ்சாப் அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்ததால், தனிப்படை அமைக்கப்பட்டு முதல்கட்டமாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர் அசோக்குமார். ஒப்பந்ததாரர். இவரது மனைவி ஆஷாராணி. இவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் பதன்கோட் அருகேவுள்ள தார்யால் என்ற கிராமத்தில் வசித்து வந்தனர். கடந்த மாதம் (ஆகஸ்டு) 19-ந் தேதி நள்ளிரவில் இவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அசோக்குமார், ஆஷாராணி மற்றும் அவர்களது மகன் கவுசல் ஆகியோரை கடுமையாக தாக்கினர். இதில் அசோக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கவுசல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 31-ந் தேதி உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஷாராணி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க துபாய் சென்றிருந்த சுரேஷ் ரெய்னா உறவினர்கள் இறந்ததால் இந்தியா திரும்பி பதன்கோட் வந்தார். சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க பஞ்சாப் அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்ததால், தனிப்படை அமைக்கப்பட்டு முதல்கட்டமாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X