என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா சிகிச்சை மைய திறப்பு விழாவில் ஒன்றாக கலந்து கொண்ட அஜித்பவார், தேவேந்திர பட்னாவிஸ்
Byமாலை மலர்29 Aug 2020 3:34 AM GMT (Updated: 29 Aug 2020 3:34 AM GMT)
புனே பாலேவாடி பகுதியில் கொரோனா சிகிச்சை மைய திறப்பு விழாவில் துணை முதல்-மந்திரி அஜித் பவாரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசும் ஒன்றாக கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புனே :
புனே பாலேவாடி பகுதியில் நேற்று கொரோனா சிகிச்சை மைய திறப்பு விழா நடந்தது. விழாவில் துணை முதல்-மந்திரி அஜித் பவாரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசும் ஒன்றாக கலந்து கொண்டனர். விழாவில் 2 பேரும் அருகருகே நின்று கொண்டு இருந்தனர்.
மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டு பதவி ஏற்க இருந்தநிலையில், அஜித் பவார் பாரதீய ஜனதாவுடன் இணைந்து கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி துணை முதல்-மந்தியாக பதவி ஏற்றார். தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி ஆனார். எனினும் போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால் பொறுப்பேற்ற 80 மணி நேரத்தில் அந்த ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு உருவானது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் அஜித்பவாரும், தேவேந்திர பட்னாவிசும் ஒன்றாக விழாவில் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விழாவில் பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், புனே மேயர் முரளிதர் மகோல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
புனே பாலேவாடி பகுதியில் நேற்று கொரோனா சிகிச்சை மைய திறப்பு விழா நடந்தது. விழாவில் துணை முதல்-மந்திரி அஜித் பவாரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசும் ஒன்றாக கலந்து கொண்டனர். விழாவில் 2 பேரும் அருகருகே நின்று கொண்டு இருந்தனர்.
மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டு பதவி ஏற்க இருந்தநிலையில், அஜித் பவார் பாரதீய ஜனதாவுடன் இணைந்து கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி துணை முதல்-மந்தியாக பதவி ஏற்றார். தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி ஆனார். எனினும் போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால் பொறுப்பேற்ற 80 மணி நேரத்தில் அந்த ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு உருவானது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் அஜித்பவாரும், தேவேந்திர பட்னாவிசும் ஒன்றாக விழாவில் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விழாவில் பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், புனே மேயர் முரளிதர் மகோல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X