என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டை நாட 7 மாநில முதல்வர்கள் முடிவு
Byமாலை மலர்26 Aug 2020 2:04 PM GMT (Updated: 26 Aug 2020 2:04 PM GMT)
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டை நாட 7 மாநில முதல் மந்திரிகள் முடிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி:
நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல்வேறு மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் இந்தாண்டு தேர்வு நடத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து பா.ஜ.க. ஆளாத 7 மாநில முதல் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிற்பகலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டை நாட 7 மாநில முதல் மந்திரிகளும் முடிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X