என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிகளை திறக்க அரசு அவசரம் காட்டவில்லை: மந்திரி சுரேஷ்குமார்
Byமாலை மலர்29 July 2020 3:50 AM GMT (Updated: 29 July 2020 3:50 AM GMT)
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க அரசு அவசரம் காட்டவில்லை. ஆனால் குழந்தைகளை தொடர்ந்து கற்றல் பணிகளில் ஈடுபடுத்த என்னென்ன வழிகள் உள்ளதோ அதுகுறித்து ஆராய்ந்து வருவதாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு :
கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் அவர் பேசியதாவது:-
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க அரசு அவசரம் காட்டவில்லை. ஆனால் குழந்தைகளை தொடர்ந்து கற்றல் பணிகளில் ஈடுபடுத்த என்னென்ன வழிகள் உள்ளதோ அதுகுறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். ஏற்கனவே ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. தொலைக்காட்சிகள் மூலம் பயிற்றுவித்தல் பணி நடக்கிறது. யூ-டியூப், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றின் மூலமும் குழந்தைகளுக்கு கற்பித்தலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளின் நூலகங்களுக்கு குழந்தைகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்து புத்தகங்களை படிக்கலாம். இந்த நெருக்கடியான தருணத்தில் பாடத்திட்டம் முக்கியம் அல்ல. கற்றல் பணி நடைபெற வேண்டும். அது தான் முக்கியம். பாடத்திட்டம் சாராத விஷயமாக இருந்தாலும் சரி, குழந்தைகள் படிக்க வேண்டும்.
இவ்வாறு சுரேஷ்குமார் பேசினார்.
கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் அவர் பேசியதாவது:-
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க அரசு அவசரம் காட்டவில்லை. ஆனால் குழந்தைகளை தொடர்ந்து கற்றல் பணிகளில் ஈடுபடுத்த என்னென்ன வழிகள் உள்ளதோ அதுகுறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். ஏற்கனவே ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. தொலைக்காட்சிகள் மூலம் பயிற்றுவித்தல் பணி நடக்கிறது. யூ-டியூப், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றின் மூலமும் குழந்தைகளுக்கு கற்பித்தலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளின் நூலகங்களுக்கு குழந்தைகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்து புத்தகங்களை படிக்கலாம். இந்த நெருக்கடியான தருணத்தில் பாடத்திட்டம் முக்கியம் அல்ல. கற்றல் பணி நடைபெற வேண்டும். அது தான் முக்கியம். பாடத்திட்டம் சாராத விஷயமாக இருந்தாலும் சரி, குழந்தைகள் படிக்க வேண்டும்.
இவ்வாறு சுரேஷ்குமார் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X