என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரசில் பதவிகள் பறிப்பு: சச்சின் பைலட்டுக்கு பாஜக அழைப்பு
Byமாலை மலர்15 July 2020 3:57 AM GMT (Updated: 15 July 2020 3:57 AM GMT)
எங்கள் கொள்கைகளை நம்புவோருக்கு பா.ஜனதாவின் கதவு திறந்தே இருக்கிறது. சச்சின் பைலட் எங்களுடன் சேர்ந்தால் இருகரம் விரித்து வரவேற்போம் என்று மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் கூறியுள்ளார்.
புதுடெல்லி :
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும், மாநில அரசில் துணை முதல்-மந்திரியாகவும் இருந்த சச்சின் பைலட், நேற்று அந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். காங்கிரசில் நீண்டகாலமாக முன்னணி தலைவராக இருந்த சச்சின் பைலட்டின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு கட்சிகளிடம் எழுந்துள்ளது. இந்த நிலையில் பைலட்டுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்து உள்ளது. இது குறித்து மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மிகப்பெரிய அடித்தளம் கொண்ட ஒருவர் பா.ஜனதாவிலோ அல்லது வேறு எந்த கட்சியிலோ சேர்ந்தால், அவரை அனைவரும் வரவேற்பர். எங்கள் கொள்கைகளில் நம்பிக்கை வைத்து யாராவது வந்தால், அவர்களை நாங்கள் இருகரம் விரித்து வரவேற்போம். இது வழக்கமான நடைமுறைதான்’ என்று கூறினார்.
இந்த கருத்தை எதிரொலித்த மற்றொரு பா.ஜனதா தலைவரான பி.பி.சவுத்ரி, ‘காங்கிரசில் இருந்து ஒரு இளம் தலைவர் ஓரங்கட்டப்பட்டு உள்ளார். காங்கிரசில் இளம் தலைவர்களுக்கு இடமில்லை. எனவே ஏராளமானவர்கள் அவருடன் இணைந்து வருகின்றனர். எங்கள் கொள்கைகளை நம்புவோருக்கு பா.ஜனதாவின் கதவு திறந்தே இருக்கிறது. சச்சின் பைலட் எங்களுடன் சேர்ந்தால் எந்த பிரச்சினையும் ஏற்படும் என நான் நினைக்கவில்லை. எனினும் இந்த விவகாரத்தில் கட்சியின் தேசிய தலைமை இறுதி முடிவு எடுக்கும்’ என தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும், மாநில அரசில் துணை முதல்-மந்திரியாகவும் இருந்த சச்சின் பைலட், நேற்று அந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். காங்கிரசில் நீண்டகாலமாக முன்னணி தலைவராக இருந்த சச்சின் பைலட்டின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு கட்சிகளிடம் எழுந்துள்ளது. இந்த நிலையில் பைலட்டுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்து உள்ளது. இது குறித்து மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மிகப்பெரிய அடித்தளம் கொண்ட ஒருவர் பா.ஜனதாவிலோ அல்லது வேறு எந்த கட்சியிலோ சேர்ந்தால், அவரை அனைவரும் வரவேற்பர். எங்கள் கொள்கைகளில் நம்பிக்கை வைத்து யாராவது வந்தால், அவர்களை நாங்கள் இருகரம் விரித்து வரவேற்போம். இது வழக்கமான நடைமுறைதான்’ என்று கூறினார்.
இந்த கருத்தை எதிரொலித்த மற்றொரு பா.ஜனதா தலைவரான பி.பி.சவுத்ரி, ‘காங்கிரசில் இருந்து ஒரு இளம் தலைவர் ஓரங்கட்டப்பட்டு உள்ளார். காங்கிரசில் இளம் தலைவர்களுக்கு இடமில்லை. எனவே ஏராளமானவர்கள் அவருடன் இணைந்து வருகின்றனர். எங்கள் கொள்கைகளை நம்புவோருக்கு பா.ஜனதாவின் கதவு திறந்தே இருக்கிறது. சச்சின் பைலட் எங்களுடன் சேர்ந்தால் எந்த பிரச்சினையும் ஏற்படும் என நான் நினைக்கவில்லை. எனினும் இந்த விவகாரத்தில் கட்சியின் தேசிய தலைமை இறுதி முடிவு எடுக்கும்’ என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X