search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெகதீஷ் ஷெட்டர்
    X
    ஜெகதீஷ் ஷெட்டர்

    நாட்டில் காங்கிரசுக்கு இனி எதிர்காலம் இல்லை: மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர்

    நாட்டில் காங்கிரசுக்கு இனி எதிர்காலம் இல்லை. ராகுல்காந்தியை முன்னிறுத்தி செல்லும் காங்கிரசை மக்கள் விரும்பவில்லை என்று தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் கூறியுள்ளார்.
    உப்பள்ளி :

    தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    நாட்டில் காங்கிரசுக்கு இனி எதிர்காலம் இல்லை. ராகுல்காந்தியை முன்னிறுத்தி செல்லும் காங்கிரசை மக்கள் விரும்பவில்லை. கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட்டது அவர்களது உட்கட்சி விவகாரம். அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. போலி விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது குறித்து விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

    இதுகுறித்து மந்திரிசபை கூட்டத்தில் விவாதிப்போம். போலி விதைகளை வாங்கி பயன்படுத்திய விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
    Next Story
    ×