search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி
    X
    குமாரசாமி

    தேவேகவுடாவுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி: குமாரசாமி

    மாநிலங்களவை தேர்தலில் தேவேகவுடாவுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு :

    மாநிலங்களவை தேர்தலில் பேட்டியிட தேவேகவுடா மனு தாக்கல் செய்த பிறகு அவரது மகனான முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    “மாநிலங்களவை தேர்தலில் பா.ஜனதா 2 இடங்களில் மட்டும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதனால் அக்கட்சி 3-வது வேட்பாளரை களம் இறக்கவில்லை. அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, தேவேகவுடாவை தொடர்பு கொண்டு, தேர்தலில் போட்டியிடுமாறு வற்புறுத்தினார்.

    அதனால் தேவேகவுடா மனு தாக்கல் செய்துள்ளார். தள்ளாத வயதில் மாநிலங்களவைக்கு போக தேவேகவுடா விரும்பவில்லை. அழுத்தம் வந்ததை அடுத்து அவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். தேவேகவுடாவுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.”

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    தேவேகவுடா மனு தாக்கல் செய்துவிட்டு, விதான சவுதா வளாகத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த மந்திரி சி.டி.ரவியை பார்த்து வணக்கம் தெரிவித்த அவர், “உங்கள் கட்சி வேட்பாளர்கள் இன்னும் மனுதாக்கல் செய்யவில்லையா, அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவியுங்கள்” என்றார். பதிலுக்கு சி.டி.ரவி, இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்து, “உங்களுக்கு எனது வாழ்த்துகள்” என்று கூறிவிட்டு சென்றார்.
    Next Story
    ×