என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேபிட் டெஸ்ட் கருவி விவகாரம் - பிரதமர் நடவடிக்கை எடுக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்
Byமாலை மலர்28 April 2020 9:57 AM GMT (Updated: 28 April 2020 9:57 AM GMT)
ரேபிட் டெஸ்ட் கருவி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனா பேரிடருக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் போராடிக் கொண்டிருக்கும்போது, சிலர் அதை பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டி வருகிறார்கள். கொரோனா பாதிப்பை கண்டறியும் ‘ரேபிட் டெஸ்ட்’ கருவிகளை மத்திய அரசுக்கு அதிக விலைக்கு விற்றுள்ளனர்.
இத்தகைய ஊழல் மனோபாவத்தை கண்டு ஒவ்வொருவரும் வெட்கப்படுகிறார்கள். அவர்களை நாடு மன்னிக்காது. அவர்கள் மீது பிரதமர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கொரோனா ‘ரேபிட் டெஸ்ட்’ கருவியை ரூ.225-க்கு இறக்குமதி செய்து, அதை மத்திய அரசுக்கு 600 ரூபாய்க்கு விற்றுள்ளனர். இதன்மூலம் 166 சதவீத லாபம் ஈட்டி உள்ளனர்.இதில் ஊழல் நடந்துள்ளது. வெட்கக்கேடான, மனிதத்தன்மையற்ற செயல். இதற்கு காரணமானவர்களை பிரதமர் மோடி கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனா பேரிடருக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் போராடிக் கொண்டிருக்கும்போது, சிலர் அதை பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டி வருகிறார்கள். கொரோனா பாதிப்பை கண்டறியும் ‘ரேபிட் டெஸ்ட்’ கருவிகளை மத்திய அரசுக்கு அதிக விலைக்கு விற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X