என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வறுமையை சுவருக்கு பின்னால் மறைக்க பார்க்கிறார்கள்: பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
Byமாலை மலர்18 Feb 2020 5:11 PM GMT (Updated: 18 Feb 2020 5:11 PM GMT)
அமெரிக்க அதிபர் டிரம்ப் குஜராத்துக்கு வரவிருப்பதையொட்டி அங்கு வறுமையை சுவருக்கு பின்னால் மறைக்கப்பார்க்கிறார்கள் என்று பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி:
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா டுவிட்டரில், ‘‘நாம் வாழும் இந்த காலத்தில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி சில டன்களாகவும், குடிமக்களின் உரிமைகள் சில வோல்ட் அளவிலும், தேசியவாதம் டெசிபல் அளவிலும், வறுமை நீளத்திலும், உயரத்திலும் சுவர் அளவுக்கும் உள்ளது. இதுதான் பா.ஜனதாவின் புதிய இந்தியா’’ என்று கூறியுள்ளார்.
மற்றொரு செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப், ‘‘பா.ஜனதா அரசுக்கு பிடித்த விளையாட்டு கண்ணாமூச்சி. விவசாயிகள் தற்கொலை விவரங்கள், வேலையில்லாதோர் பட்டியல், பண மதிப்பிழப்பின் உண்மை, உள்நாட்டு உற்பத்தியின் உண்மையான தகவல் ஆகியவை மறைக்கப்படுகிறது. குஜராத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவிருப்பதையொட்டி வறுமையை சுவருக்கு பின்னால் மறைக்கப்பார்க்கிறார்கள்.
இப்போது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மக்களின் நுகர்வு குறைந்து விட்டதையும் மறைத்து விட்டார்கள். இந்த தகவல்களை மறைக்காமல் மக்கள் மத்தியில் வெளிப்படுத்த வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X