என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை அறிக்கை தாக்கல்
Byமாலை மலர்14 Feb 2020 10:19 AM GMT (Updated: 14 Feb 2020 10:19 AM GMT)
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக இன்று டெல்லி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் விசாரணையின் தற்போதைய அறிக்கையை தாக்கல் செய்தது.
புதுடெல்லி:
கடந்த 2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்த போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது.
இந்த முதலீடு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரி சபை குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்கு பிரதிபலனாக லஞ்சப்பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. யும், சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிடோர் மீது வழக்குப்பதிவாகி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இந்த வழக்கு டெல்லி சிறப்பு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் கோர்ட்டில் விசாரணையின் தற்போதைய அறிக்கையை தாக்கல் செய்தது.
மலேசியாவில் இருந்து சில தகவல்கள் வரவேண்டி இருப்பதாகவும், அதற்காக காத்து இருப்பதாகவும் சி.பி.ஐ. கோர்ட்டில் தெரிவித்தது.
கடந்த 2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்த போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது.
இந்த முதலீடு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரி சபை குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்கு பிரதிபலனாக லஞ்சப்பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. யும், சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிடோர் மீது வழக்குப்பதிவாகி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இந்த வழக்கு டெல்லி சிறப்பு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் கோர்ட்டில் விசாரணையின் தற்போதைய அறிக்கையை தாக்கல் செய்தது.
மலேசியாவில் இருந்து சில தகவல்கள் வரவேண்டி இருப்பதாகவும், அதற்காக காத்து இருப்பதாகவும் சி.பி.ஐ. கோர்ட்டில் தெரிவித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X