search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏர்செல் மேக்சிஸ் வழக்கு"

    ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி  அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதே வழக்கில் சி.பி.ஐ முன் ஆஜரான ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் கேள்விகள் எழுப்பினர். 

    இந்நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தன்னை அமலாக்க துறை கைது செய்வதற்கு எதிராக முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் கடந்த ஜூன் 5-ந் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா கோர்ட், ஜூலை 10-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. 

    இந்நிலையில், இன்று நடந்த மனு மீதான விசாரணைக்காக ப.சிதம்பரம் ஆஜராகியிருந்தார். விசாரணை முடிவில், சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவரையும் ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 
    ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். #KartiChidambaram #AircelMaxiscase
    புதுடெல்லி:

    ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் சுமார் 3500 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு நிதிக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் சில முறைகேடுகள் நடைபெற்றதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது தந்தையை கைது செய்ய டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் தடை விதித்திருந்தது. இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறையினர் கோர்ட்டில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 

    இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்திடம் நேற்று சுமார் 6 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 
    ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று நடத்திய 6 1/2 மணி நேர விசாரணை நிறைவடைந்துள்ளது. #PChidambaram #AircelMaxisCase
    புதுடெல்லி:

    ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் கடந்த 2006ம் ஆண்டு முதலீடு செய்வதற்கு அப்போதைய நிதி மந்திரி சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

    இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்க துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தினார்கள். கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. எனவே, அமலாக்கத்துறை தன்னை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், சிதம்பரத்தை ஜூன் 5-ம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதித்தது. 

    அத்துடன் ஜூன் 5-ம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, முன்ஜாமீன் மனு மீதான விசாரணையையும் ஒத்திவைத்தது. அதன்படி, இன்று காலை டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிதம்பரம் ஆஜரானார். காலை அவரிடம் தொடங்கிய விசாரணை பிற்பகல் வரை நீண்டது.

    பின்னர், உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் விசாரணை தொடங்கியது. சுமார் 6 1/2 மணி நேரத்திற்கு பிறகு விசாரணை முடிந்து அவர் வெளியே வந்தார். 
    ×