search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்-கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீடிப்பு: டெல்லி சிபிஐ கோர்ட்டு உத்தரவு
    X

    ப.சிதம்பரம்-கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீடிப்பு: டெல்லி சிபிஐ கோர்ட்டு உத்தரவு

    ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை நவம்பர் 1-ந்தேதி வரை கைது செய்ய தடையை நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #PChidambaram #kartichidambaram
    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ப.சிதம்பரம்.

    2006-ம் ஆண்டு இவர் மத்திய நிதி மந்திரியாக இருந்த போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரி சபை குழுவின் அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த முதலீடு விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனம் உதவியதாக புகார் எழுந்தது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் கடந்த ஜூலை 19-ந்தேதி சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்று இருந்தன.

    இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். பலமுறை அவர்கள் இருவர் மீதான கைது தடையை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை என்றார். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

    அதை தொடர்ந்து நவம்பர் 1-ந்தேதி வரை ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீட்டித்து நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டார். #PChidambaram #kartichidambaram
    Next Story
    ×