என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல் காந்தி டியூப்லைட்: பிரதமர் மோடி கிண்டல்
Byமாலை மலர்7 Feb 2020 2:20 AM GMT (Updated: 7 Feb 2020 2:20 AM GMT)
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேலையில்லா திண்டாட்டம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தியை டியூப் லைட்டுக்கு ஒப்பிட்டு கிண்டலடித்தார்.
புதுடெல்லி :
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசியபோது, ‘‘இன்னும் 6 மாதங்களில் நாங்கள் மோடியை தடியால் அடிப்போம் என்று ஒருவர் (ராகுல் காந்தி) பேசி இருக்கிறார். இது கடினமானதாக இருக்கும் என்று கருதுகிறேன். எனவே இதற்கு 6 மாதங்கள் தயாராக வேண்டும். இந்த 6 மாதங்களில் நான் கூடுதல் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். அப்போது அடி தாங்குவதற்கு எனது முதுகு தயாராகி விடும்’’ என்று கூறினார்.
அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது இருக்கையில் இருந்து எழுந்து வேலையில்லா திண்டாட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்.
உடனே மோடி, ராகுல் காந்தியை டியூப் லைட்டுக்கு ஒப்பிட்டு கிண்டலடித்தார்.
அப்போது அவர், ‘‘நான் 30-40 நிமிடங்களாக பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் மின்சாரம் வர நீண்ட நேரமாகி விட்டது. பல டியூப் லைட்டுகள் இப்படித்தான் இருக்கின்றன’’ என்று கூறினார். அதன் அர்த்தம் உணர்ந்த ஆளும் பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள் குபீர் என சிரித்தனர். இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசியபோது, ‘‘இன்னும் 6 மாதங்களில் நாங்கள் மோடியை தடியால் அடிப்போம் என்று ஒருவர் (ராகுல் காந்தி) பேசி இருக்கிறார். இது கடினமானதாக இருக்கும் என்று கருதுகிறேன். எனவே இதற்கு 6 மாதங்கள் தயாராக வேண்டும். இந்த 6 மாதங்களில் நான் கூடுதல் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். அப்போது அடி தாங்குவதற்கு எனது முதுகு தயாராகி விடும்’’ என்று கூறினார்.
அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது இருக்கையில் இருந்து எழுந்து வேலையில்லா திண்டாட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்.
உடனே மோடி, ராகுல் காந்தியை டியூப் லைட்டுக்கு ஒப்பிட்டு கிண்டலடித்தார்.
அப்போது அவர், ‘‘நான் 30-40 நிமிடங்களாக பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் மின்சாரம் வர நீண்ட நேரமாகி விட்டது. பல டியூப் லைட்டுகள் இப்படித்தான் இருக்கின்றன’’ என்று கூறினார். அதன் அர்த்தம் உணர்ந்த ஆளும் பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள் குபீர் என சிரித்தனர். இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X