என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் ஷேக் அப்துல்லா பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை ரத்து
Byமாலை மலர்28 Dec 2019 10:24 PM GMT (Updated: 28 Dec 2019 10:24 PM GMT)
காஷ்மீரில் முன்னாள் முதல்-மந்திரி ஷேக் அப்துல்லா பிறந்த நாளுக்கு அளித்து வந்த அரசு விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு:
காஷ்மீரில் முன்னாள் முதல்-மந்திரி ஷேக் அப்துல்லா பிறந்த நாளான டிசம்பர் மாதம் 5-ந்தேதி அரசு விடுமுறையாக இருந்தது. அதுபோல் ஜூலை மாதம் 13-ந்தேதி தியாகிகள் தினம் என்று அரசு விடுமுறை விடப்பட்டு வந்தது. இந்த 2 விடுமுறைகளும் தற்போது ரத்து செய்யப்படுகின்றன.
அதற்கு பதிலாக அக்டோபர் மாதம் 26-ந்தேதி காஷ்மீர் இணைப்பு தினம் என்று அறிவித்து அதற்கு அரசு விடுமுறை விடப்படுகிறது. காஷ்மீர் மாநிலத்தில் 2020-ம் ஆண்டுக்கான விடுமுறை தின அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.
1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந்தேதி காஷ்மீரை ஆண்டு வந்த மன்னர் ஹரி சிங், இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் அப்போதைய இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாளைத்தான் ‘காஷ்மீர் இணைப்பு தினமாக’அறிவித்து இருக்கிறார்கள்.
அதுபோல் கடந்த 1931-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந்தேதி காஷ்மீர் மன்னர் ஹரி சிங் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனை நினைவுக் கூறும் விதமாக தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் முன்னாள் முதல்-மந்திரி ஷேக் அப்துல்லா பிறந்த நாளான டிசம்பர் மாதம் 5-ந்தேதி அரசு விடுமுறையாக இருந்தது. அதுபோல் ஜூலை மாதம் 13-ந்தேதி தியாகிகள் தினம் என்று அரசு விடுமுறை விடப்பட்டு வந்தது. இந்த 2 விடுமுறைகளும் தற்போது ரத்து செய்யப்படுகின்றன.
அதற்கு பதிலாக அக்டோபர் மாதம் 26-ந்தேதி காஷ்மீர் இணைப்பு தினம் என்று அறிவித்து அதற்கு அரசு விடுமுறை விடப்படுகிறது. காஷ்மீர் மாநிலத்தில் 2020-ம் ஆண்டுக்கான விடுமுறை தின அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.
1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந்தேதி காஷ்மீரை ஆண்டு வந்த மன்னர் ஹரி சிங், இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் அப்போதைய இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாளைத்தான் ‘காஷ்மீர் இணைப்பு தினமாக’அறிவித்து இருக்கிறார்கள்.
அதுபோல் கடந்த 1931-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந்தேதி காஷ்மீர் மன்னர் ஹரி சிங் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனை நினைவுக் கூறும் விதமாக தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X