search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனிமொழி
    X
    கனிமொழி

    மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் ஐ.ஐ.டி. பேராசிரியர்களை காப்பாற்றுவது யார்?- கனிமொழி கேள்வி

    மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் ஐ.ஐ.டி. பேராசிரியர்களை காப்பாற்றுவது யார்? என்று பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார்.
    புதுடெல்லி :

    சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தி.மு.க. குரல் எழுப்பும் என்று, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி பாராளுமன்ற மக்களவையில் நேற்று கனிமொழி எம்.பி. அதுபற்றி பேசினார். அவர் பேசியதாவது:-

    இந்தியாவின் உயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் கடந்த 10 ஆண்டுகளில் 52 மாணவர்கள் தற்கொலை செய்து இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில், உயர்கல்வி துறையில் தீண்டாமை கொடுமை தொடர்பாக 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய மந்திரியே தெரிவித்து இருக்கிறார். இது வெட்கக்கேடானது.

    தற்போது சென்னை ஐ.ஐ.டி.யில் பாத்திமா என்ற மாணவி மர்மமான முறையில் தற்கொலை செய்துள்ளார். அந்த மாணவியின் பெற்றோர் தங்கள் மகளின் அறைக்கு செல்வதற்கு முன்பே அந்த அறை சுத்தமாக துடைக்கப்பட்டு உள்ளது. தூக்கு மாட்டிக்கொண்டதாக சொல்லப்படும் கயிறு கூட அங்கிருந்து அகற்றப்பட்டு விட்டது.

    பாத்திமாவின் செல்போனில் சுட்டிக்காட்டப்பட்ட ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் மீது இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. அந்த பேராசிரியர்களை யார் காப்பாற்றி கொண்டு இருக்கிறார்கள்?. ஏன் அவர்கள் உடனடியாக விசாரணைக்கு அழைக்கப்படவில்லை?.

    ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் என்ன தான் நடந்துகொண்டிருக்கிறது?. மாணவர்கள் தற்கொலை செய்வது இப்படியே தொடர்வதால் ஐ.ஐ.டி.யின் மாண்பு சிதைந்து கொண்டே வருகிறது. கல்வி நிலையம் என்பது இதுபோன்ற மதத்தீண்டாமையை கடைபிடிக்கும் இடமாக மாறக்கூடாது. இது தொடர்ந்தால் உயர்கல்வி நிறுவனங்களே தொடர்ந்து செயல்பட முடியாது.

    இவ்வாறு கனிமொழி பேசினார்.
    Next Story
    ×