என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 மாநில தேர்தல் முடிவுக்கு பின்னர் சோனியா காந்தி தலைமையில் 17 பேர் குழு ஆலோசனை
Byமாலை மலர்26 Oct 2019 12:28 AM GMT (Updated: 26 Oct 2019 12:28 AM GMT)
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சியின் 17 முன்னணி தலைவர்கள் நேற்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சியின் 17 முன்னணி தலைவர்கள் நேற்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். மராட்டியம், அரியானா மாநில தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட 17 பேர் கலந்துகொண்டனர். இந்த குழுவில் பிரியங்கா உறுப்பினராக இல்லை.
கூட்டம் முடிந்தபின்னர் இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜெவாலா கூறும்போது, “பா.ஜனதா ஆட்சியில் விவசாயிகள், சிறு வியாபாரிகள், தொழிற்சாலை வைத்திருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் நிறுவனம், நிலம் ஆகியவைகளை பகிரங்கமாக விற்றுவிட்டு, வேறு வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். இந்த பிரச்சினைகள் பற்றி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப் பட்டது” என்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சியின் 17 முன்னணி தலைவர்கள் நேற்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். மராட்டியம், அரியானா மாநில தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட 17 பேர் கலந்துகொண்டனர். இந்த குழுவில் பிரியங்கா உறுப்பினராக இல்லை.
கூட்டம் முடிந்தபின்னர் இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜெவாலா கூறும்போது, “பா.ஜனதா ஆட்சியில் விவசாயிகள், சிறு வியாபாரிகள், தொழிற்சாலை வைத்திருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் நிறுவனம், நிலம் ஆகியவைகளை பகிரங்கமாக விற்றுவிட்டு, வேறு வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். இந்த பிரச்சினைகள் பற்றி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப் பட்டது” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X