என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கேரளாவில் 4 மாவட்டங்களில் மீண்டும் அதிதீவிர மழைக்கு வாய்ப்பு
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முடிந்த சில நாட்களிலேயே வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழையின்போதுதான் அதிக மழை பொழிவு இருக்கும். வடகிழக்கு பருவ மழை காலத்தில் அதிக மழை பொழிவு இருக்காது.
ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
எர்ணாகுளம் மாவட்டம் தான் வடகிழக்கு பருவமழையால் அதிக பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. இங்கு கொட்டி தீர்த்த மழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியது. கொச்சி ரெயில் நிலையத்திலும் மழை வெள்ளம் புகுந்ததால் ரெயில் போக்குவரத்து தடைபட்டது. பாலாரி வட்டத்தில் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் ஓடியது.
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் வெள்ளம் புகுந்தது. மாநிலம் முழுவதும் மழையால் 35-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன.
எர்ணாகுளத்தை போல மலையோர மாவட்டங்களான வயநாடு, மலப்புரம் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மலைகளில் இருந்து பாய்ந்தோடி வரும் காட்டாற்று வெள்ளத்தில் பாறைகள் இழுத்து வரப்படுகின்றன. இதனால் மலையோரங்களில் உள்ள வீடுகள் இடியும் நிலை ஏற்பட்டது.
கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பத்தினம் திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழை பெய்யுமென்றும், கோட்டயம், இடுக்கி, காசர்கோடு மாவட்டங்களில் நாளை மறுநாள் அதிதீவிர மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் 19 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 2,580 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்