search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை வாய்ப்பு"

    வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பரவலாக இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யலாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    கடும் வெயிலால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் வகையில், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சூரிய வெப்பம்  நேரடியாக தாக்கும் வகையில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.



    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் பகுதியில் 4 செமீ மழை பதிவாகி உள்ளது. தேனி மாவட்டம் பெரியார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தலா 3 செமீ மழை பெய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல் ஒன்று வர இருக்கிறது. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. #Rain #TN
    சென்னை:

    தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனினும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில் தமிழகத்தை நோக்கி அடுத்த வாரம் புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. அது அங்கிருந்து நகர்ந்து 28-ந்தேதி பிற்பகலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இலங்கை நோக்கி நகருகிறது.

    அதன்பின்னர், இலங்கை வழியாக தமிழகத்துக்கு புயலாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது. தற்போதையை நிலைப்படி தமிழகத்தை நோக்கியும், மியான்மர் பகுதியை நோக்கியும் 2 சூழல்களில் அதன் போக்கு இருக்கிறது.



    25-ந்தேதிக்கு பிறகு தான் அதன் நிலைப்பாடு குறித்து உறுதியாக சொல்ல முடியும். தமிழகத்தை நோக்கி புயல் வந்தால், தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

    அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று), காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #Rain #TN

    தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. #TamilNaduRains #Rainfall #IMD
    புதுடெல்லி:

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மழை முன்னறிவிப்பு வருமாறு:-

    தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இன்று சில இடங்களில் 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் சூறைக் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் முதல் 24ம் தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.



    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 12 செமீ மழை பெய்துள்ளது. நாமக்கல்லில் 8 செமீ, கன்னியாகுமரி கோதையாறில் 7 செமீ, கொடைக்கானலில் 6 செமீ, மஞ்சளாறில் 5 செமீ, வேடசந்தூரில் 4 செமீ  மழை பதிவாகி உள்ளது. #TamilNaduRains #Rainfall #IMD
    தமிழகம், புதுச்சேரியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. #Rain #MeteorologicalCentre
    சென்னை:

    சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மாலத்தீவு மற்றும் கன்னியாகுமரி கடல் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரையிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வை பொறுத்து மழை வலுப்பெறுமா? என்பது தெரியவரும்.



    சென்னையை பொறுத்தமட்டில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rain #MeteorologicalCentre
    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Rain #SouthTN #DeltaDistricts
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென் தமிழகத்தின் கடற்கரையையொட்டி உள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மாலத்தீவு பகுதி மற்றும் அதனையொட்டியுள்ள பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலில் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால், புதுவை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.



    தமிழகத்தின் வட கடலோர பகுதி, புதுச்சேரி, தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இருக்காது. கிழக்கு திசையில் இருந்து வரும் காற்று வடக்கு நோக்கி சற்று நகர்ந்தால்தான் வட தமிழக பகுதிகளில் மழை பெய்யும். இல்லையென்றால் தென் தமிழக பகுதிகளுக்கே மழை வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

    கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 10 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கொள்ளிடத்தில் 7 செ.மீட்டரும், சிதம்பரம், சீர்காழியில் 6 செ.மீட்டரும், பரங்கிபேட்டை, சேத்தியா தோப்பு, மயிலாடுதுறையில் 5 செ.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.

    அக்டோபர் 1-ந் தேதி முதல் இன்று வரை வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு முழுவதும் 31 செ.மீட்டர் பதிவாகி இருக்கிறது. இந்த கால கட்டத்தில் பெய்ய வேண்டிய மழை அளவு 35 செ.மீட்டராகும். இயல்பை விட 12 சதவீதம் குறைவாக இருக்கிறது.

    இன்னும் ஒரு மாதம் இருப்பதால் பொறுத்து இருந்து பார்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Rain #SouthTN #DeltaDistricts
    ‘கஜா’ புயலை தொடர்ந்து தெற்கு வங்க கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #GajaCyclone
    சென்னை:

    வங்க கடலில் உருவான ‘கஜா’ புயல் கடந்த சில நாட்களாக தமிழகத்தை மிரட்டி வந்தது. பல்வேறு கட்ட கண்ணாமூச்சி போராட்டத்துக்கு இடையே நேற்று அதிகாலை நாகை-வேதாரண்யம் இடையே ‘கஜா’ புயல் கரையை கடந்தது.

    ‘கஜா’ புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து தமிழகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-

    ‘கஜா’ புயல் இன்று (நேற்று) காலை 11.30 மணி வரையிலான நிலவரப்படி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து, திண்டுக்கல்லை ஒட்டியுள்ள பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

    இந்த பகுதிகளில் காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். தற்போதைய நிலவரப்படி தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் வருகிற 18-ந்தேதி (நாளை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 19 மற்றும் 20-ந்தேதிகளில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும். இதன் பாதிப்பு குறித்து கணித்து சொல்லப்படும்.

    ‘கஜா’ புயல் தமிழகத்தை கடந்ததை தொடர்ந்து, மீனவர்கள் கடலுக்குள் செல்லலாம். 18-ந்தேதி தெற்கு வங்க கடல் மத்திய பகுதியிலும், 19-ந்தேதி தென் மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம்.

    கடந்த 1-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலான நிலவரப்படி தமிழகம், புதுச்சேரியில் 22 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.

    இந்த காலக்கட்டத்தின் இயல்பு அளவு 29 செ.மீ. ஆகும். எனவே தற்போது பெய்திருக்கும் மழை இயல்பை விடவும் 23 சதவீதம் குறைவு ஆகும். ஆனால் நேற்று (நேற்று முன்தினம்) வரை 29 சதவீதம் வரை மழை அளவு இயல்பை விடவும் குறைவாக இருந்தது. இன்று (நேற்று) 6 சதவீத மழை நமக்கு கிடைத்திருக்கிறது. இதன்மூலம் சராசரி மழை அளவை விடவும் 23 சதவீதம் குறைவு என்ற நிலைக்கு வந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone
    தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. #Meteorological #Rain
    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. சென்னையிலும் நேற்று அனேக இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும்(திங்கட்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடி, மின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பெய்துள்ள மழை அளவு விவரம் வருமாறு:-

    தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகாசியில்(விருதுநகர் மாவட்டம்) 13 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர்(விருதுநகர்), விரிஞ்சிபுரம்(வேலூர்), ஆரணி(திருவண்ணாமலை), திண்டிவனம்(விழுப்புரம்) ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழையும், தம்மம்பட்டி(சேலம்), வானூர்(விழுப்புரம்), சேந்தமங்கலம்(நாமக்கல்) ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை அளவும் பதிவானது.

    செஞ்சி, மயிலம்(விழுப்புரம்), சூளகிரி(கிருஷ்ணகிரி), செய்யாறு(திருவண்ணாமலை), கலவை(வேலூர்) ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பெய்து உள்ளது. போளூர்(திருவண்ணாமலை), திருத்தணி, பூண்டி(திருவள்ளூர்), வேலூர், மேலாலத்தூர்(வேலூர்), ராஜபாளையம்(விருதுநகர்), ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம்(காஞ்சீபுரம்), ஆத்தூர்(சேலம்), குன்னூர்(நீலகிரி) ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    கடலூர்(கடலூர்), ஆலங்காயம், காவேரிப்பாக்கம், திருப்பத்தூர், குடியாத்தம், ஆம்பூர்(வேலூர்), அஞ்சட்டி, ராயக்கோட்டை, ஓசூர்(கிருஷ்ணகிரி), கோபிச்செட்டிப்பாளையம், பெருந்துறை(ஈரோடு), கரூர், மாயனூர்(கரூர்), திருவண்ணாமலை, வந்தவாசி, சாத்தனூர் அணை(திருவண்ணாமலை), நாமக்கல், மங்களாபுரம்(நாமக்கல்), திருக்கோவிலூர், சங்கராபுரம்(விழுப்புரம்), பள்ளிப்பட்டு, திருவாலங்காடு(திருவள்ளூர்), காரைக்குடி(சிவகங்கை), காஞ்சீபுரம், உத்திரமேரூர்(காஞ்சீபுரம்) ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    மேலும் தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. 
    ×