search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "South TamilNadu"

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Rain #SouthTN #DeltaDistricts
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென் தமிழகத்தின் கடற்கரையையொட்டி உள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மாலத்தீவு பகுதி மற்றும் அதனையொட்டியுள்ள பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலில் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால், புதுவை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.



    தமிழகத்தின் வட கடலோர பகுதி, புதுச்சேரி, தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இருக்காது. கிழக்கு திசையில் இருந்து வரும் காற்று வடக்கு நோக்கி சற்று நகர்ந்தால்தான் வட தமிழக பகுதிகளில் மழை பெய்யும். இல்லையென்றால் தென் தமிழக பகுதிகளுக்கே மழை வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

    கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 10 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கொள்ளிடத்தில் 7 செ.மீட்டரும், சிதம்பரம், சீர்காழியில் 6 செ.மீட்டரும், பரங்கிபேட்டை, சேத்தியா தோப்பு, மயிலாடுதுறையில் 5 செ.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.

    அக்டோபர் 1-ந் தேதி முதல் இன்று வரை வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு முழுவதும் 31 செ.மீட்டர் பதிவாகி இருக்கிறது. இந்த கால கட்டத்தில் பெய்ய வேண்டிய மழை அளவு 35 செ.மீட்டராகும். இயல்பை விட 12 சதவீதம் குறைவாக இருக்கிறது.

    இன்னும் ஒரு மாதம் இருப்பதால் பொறுத்து இருந்து பார்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Rain #SouthTN #DeltaDistricts
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களிலும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IMD
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த 1-ந்தேதி தமிழகத்தில் தொடங்கி பரவலாக பெய்தது. தீபாவளிக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 நாட்களாக மழை இல்லை.

    இந்த நிலையில் நேற்று இலங்கையையொட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இந்தியப் பெருங்கடல் மற்றும் குமரி கடல் பகுதிவரை பரவி இருந்தது.

    அது இன்று வலு இழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு திசையில் கன்னியாகுமரி நோக்கி நகர்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் கன்னியாகுமரியை கடந்து செல்லும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும். உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும்.


    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களிலும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் மழை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேசுவரம், ராமநாதபுரம், பாம்பன், இரணியல், திருச்செந்தூர், தூத்துக்குடி, குளச்சல், ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

    இதேபோல் அந்தமான் கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் (9-ந்தேதி) புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #IMD #HeavyRain
    தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #ChennaiRains
    சென்னை:

    சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதிகள் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் மழை நீடித்தது.

    இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    வட தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வரும் நிலையில் தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சியும் உருவாகி உள்ளது. இதனால் வடதமிழகம்- தென் தமிழகத்தில் இன்று காலை முதல் மழை பெய்தது. இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும்.


    தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழைபெய்து வருகிறது. இங்கு சில இடங்களில் கனமழையும் பெய்யும்.

    வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாவதற்கான வாய்ப்பு நிலவுவதால் வருகிற 26-ந்தேதி கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடல் சீற்றமும் அதிகம் காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் இன்று அதிகாலையில் மழை பெய்த நிலையில் தொடர்ந்து மழை தூறல் காணப்பட்டது.

    எழும்பூர், பாரிமுனை, கோயம்பேடு, வடபழனி, கிண்டி, அடையார், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், கூடுவாஞ்சேரி, ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூர், வில்லிவாக்கம், அயனாவரம் பகுதியில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.  #ChennaiRains
    ×