என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
By
மாலை மலர்16 Sep 2018 7:25 PM GMT (Updated: 16 Sep 2018 7:25 PM GMT)

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. #Meteorological #Rain
சென்னை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. சென்னையிலும் நேற்று அனேக இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும்(திங்கட்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடி, மின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பெய்துள்ள மழை அளவு விவரம் வருமாறு:-
தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகாசியில்(விருதுநகர் மாவட்டம்) 13 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர்(விருதுநகர்), விரிஞ்சிபுரம்(வேலூர்), ஆரணி(திருவண்ணாமலை), திண்டிவனம்(விழுப்புரம்) ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழையும், தம்மம்பட்டி(சேலம்), வானூர்(விழுப்புரம்), சேந்தமங்கலம்(நாமக்கல்) ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை அளவும் பதிவானது.
செஞ்சி, மயிலம்(விழுப்புரம்), சூளகிரி(கிருஷ்ணகிரி), செய்யாறு(திருவண்ணாமலை), கலவை(வேலூர்) ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பெய்து உள்ளது. போளூர்(திருவண்ணாமலை), திருத்தணி, பூண்டி(திருவள்ளூர்), வேலூர், மேலாலத்தூர்(வேலூர்), ராஜபாளையம்(விருதுநகர்), ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம்(காஞ்சீபுரம்), ஆத்தூர்(சேலம்), குன்னூர்(நீலகிரி) ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
கடலூர்(கடலூர்), ஆலங்காயம், காவேரிப்பாக்கம், திருப்பத்தூர், குடியாத்தம், ஆம்பூர்(வேலூர்), அஞ்சட்டி, ராயக்கோட்டை, ஓசூர்(கிருஷ்ணகிரி), கோபிச்செட்டிப்பாளையம், பெருந்துறை(ஈரோடு), கரூர், மாயனூர்(கரூர்), திருவண்ணாமலை, வந்தவாசி, சாத்தனூர் அணை(திருவண்ணாமலை), நாமக்கல், மங்களாபுரம்(நாமக்கல்), திருக்கோவிலூர், சங்கராபுரம்(விழுப்புரம்), பள்ளிப்பட்டு, திருவாலங்காடு(திருவள்ளூர்), காரைக்குடி(சிவகங்கை), காஞ்சீபுரம், உத்திரமேரூர்(காஞ்சீபுரம்) ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. சென்னையிலும் நேற்று அனேக இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும்(திங்கட்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடி, மின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பெய்துள்ள மழை அளவு விவரம் வருமாறு:-
தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகாசியில்(விருதுநகர் மாவட்டம்) 13 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர்(விருதுநகர்), விரிஞ்சிபுரம்(வேலூர்), ஆரணி(திருவண்ணாமலை), திண்டிவனம்(விழுப்புரம்) ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழையும், தம்மம்பட்டி(சேலம்), வானூர்(விழுப்புரம்), சேந்தமங்கலம்(நாமக்கல்) ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை அளவும் பதிவானது.
செஞ்சி, மயிலம்(விழுப்புரம்), சூளகிரி(கிருஷ்ணகிரி), செய்யாறு(திருவண்ணாமலை), கலவை(வேலூர்) ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பெய்து உள்ளது. போளூர்(திருவண்ணாமலை), திருத்தணி, பூண்டி(திருவள்ளூர்), வேலூர், மேலாலத்தூர்(வேலூர்), ராஜபாளையம்(விருதுநகர்), ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம்(காஞ்சீபுரம்), ஆத்தூர்(சேலம்), குன்னூர்(நீலகிரி) ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
கடலூர்(கடலூர்), ஆலங்காயம், காவேரிப்பாக்கம், திருப்பத்தூர், குடியாத்தம், ஆம்பூர்(வேலூர்), அஞ்சட்டி, ராயக்கோட்டை, ஓசூர்(கிருஷ்ணகிரி), கோபிச்செட்டிப்பாளையம், பெருந்துறை(ஈரோடு), கரூர், மாயனூர்(கரூர்), திருவண்ணாமலை, வந்தவாசி, சாத்தனூர் அணை(திருவண்ணாமலை), நாமக்கல், மங்களாபுரம்(நாமக்கல்), திருக்கோவிலூர், சங்கராபுரம்(விழுப்புரம்), பள்ளிப்பட்டு, திருவாலங்காடு(திருவள்ளூர்), காரைக்குடி(சிவகங்கை), காஞ்சீபுரம், உத்திரமேரூர்(காஞ்சீபுரம்) ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
