என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க கோரிய பொது நல மனு தள்ளுபடி
Byமாலை மலர்14 Oct 2019 10:31 AM GMT (Updated: 14 Oct 2019 10:31 AM GMT)
சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி:
ஆதார் எண்ணை சமூக வலைதள கணக்குகளுடன் இணைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாய் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சமூக ஊடக தளங்களை மிஞ்சும் வகையிலான போலி கணக்குகளை தடுப்பதற்கும், போலி மற்றும் கட்டண செய்திகளின் அச்சுறுத்தலை சரிபார்க்கவும் சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எல்லா விஷயங்களுக்கும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
“எல்லாவற்றிற்கும் உச்சநீதிமன்றத்திற்கு வரத் தேவையில்லை. இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மனுதாரர் வேண்டுமானால் அங்கு சென்று முறையிடலாம்” என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆதார் எண்ணை சமூக வலைதள கணக்குகளுடன் இணைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாய் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சமூக ஊடக தளங்களை மிஞ்சும் வகையிலான போலி கணக்குகளை தடுப்பதற்கும், போலி மற்றும் கட்டண செய்திகளின் அச்சுறுத்தலை சரிபார்க்கவும் சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எல்லா விஷயங்களுக்கும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
“எல்லாவற்றிற்கும் உச்சநீதிமன்றத்திற்கு வரத் தேவையில்லை. இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மனுதாரர் வேண்டுமானால் அங்கு சென்று முறையிடலாம்” என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X