என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனியார்மயத்துக்கு முதல்படியாக 2 தேஜஸ் ரெயில்கள், ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைப்பு
Byமாலை மலர்20 Aug 2019 8:31 PM GMT (Updated: 20 Aug 2019 8:31 PM GMT)
ஆமதாபாத்-மும்பை தேஜஸ் எக்ஸ்பிரஸ், டெல்லி-லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களை இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் (ஐ.ஆர்.சி.டி.சி.) சோதனை அடிப்படையில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:
பயணிகளுக்கு உலகத்தரமான சேவை கிடைப்பதற்காக, சில ரெயில்களை தனியார்வசம் ஒப்படைக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதன் முதல்படியாக, இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் (ஐ.ஆர்.சி.டி.சி.) 2 ரெயில்களை சோதனை அடிப்படையில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. ஆமதாபாத்-மும்பை தேஜஸ் எக்ஸ்பிரஸ், டெல்லி-லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகியவையே அந்த ரெயில்கள். 3 ஆண்டுகளுக்கு இந்த ரெயில்களை ஐ.ஆர்.சி.டி.சி. இயக்கும்.
இந்த ரெயில்களில், தேவைக்கு ஏற்ப அதிகரிக்கக்கூடிய சிறப்பு கட்டணம் அமல்படுத்தப்படும். கட்டண விவரத்தை ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்யும். இதில், எவ்வித சலுகைகளோ, பாஸ்களோ இருக்காது. ரெயில்வே ஊழியர்கள், ஓடும் ரெயிலில் டிக்கெட் பரிசோதனை நடத்த மாட்டார்கள்.
இருப்பினும், ரெயில்வேயின் என்ஜின் டிரைவர்கள், கார்டுகள், நிலைய மேலாளர்கள் ஆகியோர்தான் இவற்றிலும் பணிபுரிவார்கள். இந்த ரெயில்களின் சேவை, சதாப்தி ரெயில்களுக்கு இணையாக இருக்கும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
பயணிகளுக்கு உலகத்தரமான சேவை கிடைப்பதற்காக, சில ரெயில்களை தனியார்வசம் ஒப்படைக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதன் முதல்படியாக, இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் (ஐ.ஆர்.சி.டி.சி.) 2 ரெயில்களை சோதனை அடிப்படையில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. ஆமதாபாத்-மும்பை தேஜஸ் எக்ஸ்பிரஸ், டெல்லி-லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகியவையே அந்த ரெயில்கள். 3 ஆண்டுகளுக்கு இந்த ரெயில்களை ஐ.ஆர்.சி.டி.சி. இயக்கும்.
இந்த ரெயில்களில், தேவைக்கு ஏற்ப அதிகரிக்கக்கூடிய சிறப்பு கட்டணம் அமல்படுத்தப்படும். கட்டண விவரத்தை ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்யும். இதில், எவ்வித சலுகைகளோ, பாஸ்களோ இருக்காது. ரெயில்வே ஊழியர்கள், ஓடும் ரெயிலில் டிக்கெட் பரிசோதனை நடத்த மாட்டார்கள்.
இருப்பினும், ரெயில்வேயின் என்ஜின் டிரைவர்கள், கார்டுகள், நிலைய மேலாளர்கள் ஆகியோர்தான் இவற்றிலும் பணிபுரிவார்கள். இந்த ரெயில்களின் சேவை, சதாப்தி ரெயில்களுக்கு இணையாக இருக்கும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X