search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா காந்தி
    X
    பிரியங்கா காந்தி

    ஒவ்வொரு பொய்யும் இறுதியில் வெளிப்படும் - பிரியங்கா காந்தி

    ஒவ்வொரு பொய்களும் இறுதியில் கண்டிப்பாக வெளிப்படும் என்று கர்நாடகாவில் அரசு கவிழ்ந்தது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று கவிழ்ந்தது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காகாந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    எல்லாவற்றையும் வாங்க முடியாது என்பதை பா.ஜனதா ஒரு நாள் உணரும். எல்லோரையும் கட்டாயப்படுத்த முடியாது.

    பாஜக

    ஒவ்வொரு பொய்களும் இறுதியில் கண்டிப்பாக வெளிப்படும். நம் நாட்டில் குடிமக்கள், தடையற்ற ஊழலை சந்தித்து கொண்டிருக்க வேண்டும் என்று, மக்கள் நலன்களை பாதுகாக்கும் முறைகள் அகற்றப்பட்டு உள்ளது. பல ஆண்டு கால உழைப்பாலும், தியாகங்களாலும் கட்டியெழுப்பப்பட்ட ஜனநாயகம் பலவீனப்படுத்தப்பட்டு உள்ளது” என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×