என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு உறுதி
Byமாலை மலர்19 July 2019 3:17 AM GMT (Updated: 19 July 2019 3:17 AM GMT)
மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை மீண்டும் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய புள்ளியியல் துறை இணை மந்திரி ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடாது என நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரைத்து இருந்தது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசும் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை என ஏற்கனவே முடிவு செய்து உள்ளது.
எனினும் ஆந்திரா, பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் தொடர்ந்து தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் அசாம் அல்லது வேறு ஏதாவது மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இருக்கிறதா? என மாநிலங்களவையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் ரிபுன் போரா கேள்வி எழுப்பினார். மேலும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது ஆகாதா? எனவும் அவர் வினவினார்.
இதற்கு மத்திய புள்ளியியல் துறை இணை மந்திரி ராவ் இந்தர்ஜித் சிங் பதிலளிக்கையில், ‘மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை மீண்டும் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை’ என உறுதிபட தெரிவித்தார்.
எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடாது என நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரைத்து இருந்தது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசும் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை என ஏற்கனவே முடிவு செய்து உள்ளது.
எனினும் ஆந்திரா, பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் தொடர்ந்து தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் அசாம் அல்லது வேறு ஏதாவது மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இருக்கிறதா? என மாநிலங்களவையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் ரிபுன் போரா கேள்வி எழுப்பினார். மேலும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது ஆகாதா? எனவும் அவர் வினவினார்.
இதற்கு மத்திய புள்ளியியல் துறை இணை மந்திரி ராவ் இந்தர்ஜித் சிங் பதிலளிக்கையில், ‘மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை மீண்டும் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை’ என உறுதிபட தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X