search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று மீண்டும் பேசுகிறார்

    பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்ற நரேந்திர மோடி, மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களுடன் மீண்டும் பேச உள்ளேன் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் தனது கருத்தை பதிவுசெய்து வருகிறார்.

    மக்களின் பிரச்சனைகளைப் பற்றி அரசு அறிந்துகொள்ள ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி உதவுவதாக பல சந்தர்ப்பங்களில் மோடி குறிப்பிட்டிருந்தார். 
     
    53-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உங்களுடைய நல்லாசிகளின் துணையால், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை மற்றும் சக்தியுடன் மீண்டும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம்  உங்களுடன் கலந்துரையாடுவேன் என தெரிவித்தார்.

    மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்கும் மக்கள்

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மை வெற்றி பெற்று, பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைந்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.

    இந்நிலையில், மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் மீண்டும் மக்களுடன் பேச உள்ளேன் என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த 4 மாதங்களுக்கு பிறகு மன் கி பாத் நிகழ்ச்சி மீண்டும் தொடங்குகிறது. 130 கோடி மக்களின் ஒற்றுமையால் இது சாத்தியமாகி உள்ளது. காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில்  பேச உள்ளேன் என தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×