என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று மீண்டும் பேசுகிறார்
Byமாலை மலர்30 Jun 2019 1:25 AM GMT (Updated: 30 Jun 2019 1:25 AM GMT)
பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்ற நரேந்திர மோடி, மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களுடன் மீண்டும் பேச உள்ளேன் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் தனது கருத்தை பதிவுசெய்து வருகிறார்.
மக்களின் பிரச்சனைகளைப் பற்றி அரசு அறிந்துகொள்ள ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி உதவுவதாக பல சந்தர்ப்பங்களில் மோடி குறிப்பிட்டிருந்தார்.
53-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உங்களுடைய நல்லாசிகளின் துணையால், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை மற்றும் சக்தியுடன் மீண்டும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் உங்களுடன் கலந்துரையாடுவேன் என தெரிவித்தார்.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மை வெற்றி பெற்று, பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைந்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் மீண்டும் மக்களுடன் பேச உள்ளேன் என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த 4 மாதங்களுக்கு பிறகு மன் கி பாத் நிகழ்ச்சி மீண்டும் தொடங்குகிறது. 130 கோடி மக்களின் ஒற்றுமையால் இது சாத்தியமாகி உள்ளது. காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பேச உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X