search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானாவில் குவியல் குவியலாக நாய்களை கொன்ற நகராட்சி ஊழியர்கள் சஸ்பெண்ட்
    X

    தெலுங்கானாவில் குவியல் குவியலாக நாய்களை கொன்ற நகராட்சி ஊழியர்கள் சஸ்பெண்ட்

    தெலுங்கானாவின் சித்திபேட் பகுதியில் 40 தெருநாய்களை கொன்று புதைத்த நகராட்சி ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
    சித்திபேட்:

    தெலுங்கானாவின் சித்திபேட் பகுதியில் தெருக்களில் சுற்றித்திறிந்த ஏராளமான நாய்களை நகராட்சி ஊழியர்கள் சட்டவிரோதமாக விஷம் வைத்து கொன்றதாக கூறப்படுகிறது. பின்பு அந்த நாய்களை அவர்கள் ஒட்டு மொத்தமாக பள்ளம் தோண்டி மண்ணில் புதைத்தனர். 

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.



    இந்நிலையில்,  இச்சம்பவம் தொடர்பாக 4 நகராட்சி ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து சித்திபேட் மாவட்ட ஆட்சியர் வெங்கடராம ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 

    மேலும், புதைக்கப்பட்ட நாய்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அம்மாவட்ட போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×