என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இம்ரான்கான் ஆட்சியில் பயங்கரவாதம், வன்முறை இல்லாத நாடாக பாகிஸ்தான் திகழவேண்டும் - பிரதமர் மோடி
Byமாலை மலர்11 Aug 2018 10:18 PM GMT (Updated: 11 Aug 2018 10:18 PM GMT)
பாகிஸ்தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள இம்ரான்கான் ஆட்சியின் கீழ் பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாத நாடாக திகழ வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi #ImranKhan #Pakistan
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பாகிஸ்தான் தொடர்பாக கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
இதுதொடர்பாக, அவர் கூறுகையில், இந்தியாவும், பாகிஸ்தானும் நல்ல நட்புறவை பேணும் நாடுகளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். அதற்கான முன்முயற்சிகளை பல தடவை நாம் எடுத்து வந்துள்ளோம்.
சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் இம்ரான்கான் கட்சி வெற்றி பெற்றதற்கு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவரது தலைமையின் கீழ் பாகிஸ்தான் பாதுகாப்புடனும், பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாத நாடாக திகழ வேண்டும்.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். #PMModi #ImranKhan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X