என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தொடரும் முத்தலாக் கொடுமை - மனைவியை அறைக்குள் பூட்டி வைத்து கொன்றவர் கைது தொடரும் முத்தலாக் கொடுமை - மனைவியை அறைக்குள் பூட்டி வைத்து கொன்றவர் கைது](https://img.maalaimalar.com/Articles/2018/Jul/201807141743478405_Man-arrested-for-locking-up-wife-after-giving-triple-talaq_SECVPF.gif)
X
தொடரும் முத்தலாக் கொடுமை - மனைவியை அறைக்குள் பூட்டி வைத்து கொன்றவர் கைது
By
மாலை மலர்14 July 2018 12:13 PM GMT (Updated: 14 July 2018 12:13 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததுடன், உணவு, குடிநீர் ஏதுமின்றி அடைத்து வைத்து சித்ரவதை செய்து கொன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். #UttarPradesh
லக்னோ:
இஸ்லாமியர்கள் ஒரே நேரத்தில் முத்தலாக் கூறி திருமண முறிவு செய்யும் முறைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதையும் மீறி, ஒரே நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால் குற்றவியல் வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நயீம் என்பவர் தனது மனைவி ரசியாவை கடந்த ஏப்ரல் மாதம் செல்போன் மூலம் முத்தலாக் கூறியுள்ளார். மேலும், தனது மனைவி ரசியாவை தனி அறையில் உணவு, குடிநீர் இன்றி அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி ரசியாவின் குடும்பத்தினர் அவரை மீட்டுள்ளனர். இந்நிலையில், ரசியாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக, ரசியாவின் சகோதரி கூறுகையில், 2005-ம் ஆண்டு திருமணம் ஆன சில நாட்களில் இருந்து வரதட்சணை கேட்டு நயீம் கொடுமை படுத்தியதாகவும், சமீபத்தில் தொலைப்பேசி மூலம் அவர் தலாக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நயீம் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். #UttarPradesh
இஸ்லாமியர்கள் ஒரே நேரத்தில் முத்தலாக் கூறி திருமண முறிவு செய்யும் முறைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதையும் மீறி, ஒரே நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால் குற்றவியல் வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நயீம் என்பவர் தனது மனைவி ரசியாவை கடந்த ஏப்ரல் மாதம் செல்போன் மூலம் முத்தலாக் கூறியுள்ளார். மேலும், தனது மனைவி ரசியாவை தனி அறையில் உணவு, குடிநீர் இன்றி அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி ரசியாவின் குடும்பத்தினர் அவரை மீட்டுள்ளனர். இந்நிலையில், ரசியாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக, ரசியாவின் சகோதரி கூறுகையில், 2005-ம் ஆண்டு திருமணம் ஆன சில நாட்களில் இருந்து வரதட்சணை கேட்டு நயீம் கொடுமை படுத்தியதாகவும், சமீபத்தில் தொலைப்பேசி மூலம் அவர் தலாக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நயீம் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். #UttarPradesh
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)