search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடரும் முத்தலாக் கொடுமை - மனைவியை அறைக்குள் பூட்டி வைத்து கொன்றவர் கைது
    X

    தொடரும் முத்தலாக் கொடுமை - மனைவியை அறைக்குள் பூட்டி வைத்து கொன்றவர் கைது

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததுடன், உணவு, குடிநீர் ஏதுமின்றி அடைத்து வைத்து சித்ரவதை செய்து கொன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். #UttarPradesh
    லக்னோ:

    இஸ்லாமியர்கள் ஒரே நேரத்தில் முத்தலாக் கூறி திருமண முறிவு செய்யும் முறைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதையும் மீறி, ஒரே நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால் குற்றவியல் வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நயீம் என்பவர் தனது மனைவி ரசியாவை கடந்த ஏப்ரல் மாதம் செல்போன் மூலம் முத்தலாக் கூறியுள்ளார். மேலும், தனது மனைவி ரசியாவை தனி அறையில் உணவு, குடிநீர் இன்றி அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி ரசியாவின் குடும்பத்தினர் அவரை மீட்டுள்ளனர். இந்நிலையில், ரசியாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உயிரிழந்துள்ளார்.

    இதுதொடர்பாக, ரசியாவின் சகோதரி கூறுகையில், 2005-ம் ஆண்டு திருமணம் ஆன சில நாட்களில் இருந்து வரதட்சணை கேட்டு நயீம் கொடுமை படுத்தியதாகவும், சமீபத்தில் தொலைப்பேசி மூலம் அவர் தலாக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக நயீம் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். #UttarPradesh
    Next Story
    ×