என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் ஆட்சியில் இருந்த இத்தனை நாள் என்ன செய்தீர்கள்? அமித்ஷாவுக்கு காங்கிரஸ் பதிலடி
Byமாலை மலர்24 Jun 2018 2:24 AM GMT (Updated: 24 Jun 2018 2:24 AM GMT)
தனது ஜம்மு பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த அமித்ஷாவுக்கு, ஆட்சியிலிருந்த இத்தனை நாட்கள் என்ன செய்தீர்கள்? என அக்கட்சி பதிலடி கொடுத்துள்ளது. #AmitShah #Congress
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் காஷ்மீர் மாநில மூத்த தலைவரான சைபுதீன் சோஸ், காஷ்மீர் மக்கள் இந்தியாவிடம் இருந்து விடுதலையையே விரும்புகிறார்கள் என சமீபத்தில் பேசியிருந்தார். நேற்று, ஜம்மு சென்றிருந்த பாஜக தலைவர் அமித்ஷா, இதனை வைத்து காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, தேசியம் குறித்தும் தேச நலன் குறித்தும் காங்கிரசுக்கு உபதேசம் செய்ய தகுதி அமித்ஷாவுக்கு இல்லை என்று கூறினார்.
மேலும், இந்திய நாட்டுக்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பலர் தங்களது இன்னுயிரை நீத்துள்ளனர். நாட்டின் நலனுக்காக ரத்தம் சிந்தியவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸார்தான். ஜம்மு - காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைத்ததில் பெரும் பங்கும் காங்கிரசுக்கே உண்டு. உண்மை நிலை இப்படியிருக்க அமித் ஷாவோ தவறான தகவல்களைத் தெரிவித்து வருகிறார்.
அந்த மாநிலத்தில் இத்தனை நாள்களாக ஆட்சி நடத்தியபோதும் மக்கள் நலனுக்காக பாஜக எதுவுமே செய்யவில்லை. ஆனால், தற்போது காஷ்மீர் நலனில் அக்கறை இருப்பது போல அமித்ஷா முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X