என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கர்நாடக தேர்தலில் உச்சகட்ட பிரசாரம் - பா.ஜ.க. தலைவர்கள் ஒருசேர முகாமிட்டு வாக்கு சேகரிப்பு கர்நாடக தேர்தலில் உச்சகட்ட பிரசாரம் - பா.ஜ.க. தலைவர்கள் ஒருசேர முகாமிட்டு வாக்கு சேகரிப்பு](https://img.maalaimalar.com/Articles/2018/May/201805051945408526_BJP-top-leaders-swarm-Karnataka-ahead-of-assembly-polls_SECVPF.gif)
X
கர்நாடக தேர்தலில் உச்சகட்ட பிரசாரம் - பா.ஜ.க. தலைவர்கள் ஒருசேர முகாமிட்டு வாக்கு சேகரிப்பு
By
மாலை மலர்5 May 2018 2:15 PM GMT (Updated: 5 May 2018 2:15 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ள நிலையில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இன்று உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #Karnatakaelections2018 #BJPtopleaders
பெங்களூரு:
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அங்கு நடைபெற்றுவரும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
![](https://img.maalaimalar.com/InlineImage/201805051945408526_1_modi-3._L_styvpf.jpg)
வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து கட்சியினரின் பிரசாரங்களும் சூடுபிடித்து, களைகட்டியுள்ளது.
சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பு முடிவுகளின்படி, காங்கிரஸ் கட்சி 91 இடங்களிலும், பா.ஜ.க. 89 இடங்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கு 40 இடங்களும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க.வின் பிரசார பீரங்கியாக கருதப்படும் பிரதமர் நரேந்திர மோடி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டால் காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் இடைவெளியை சமப்படுத்தி, அதற்கும் மேலாக சாதித்து ஆட்சியை கைப்பற்றி விடலாம் என பா.ஜ.க,வின் தேசிய தலைமை கருதியது.
இதையடுத்து, அம்மாநிலத்தின் பல மாவட்டங்களில் பிரதமர் மோடி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் சூறாவளி பிரசாரச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று தும்கூரு, ஷிமோகா உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று பேசி வருகிறார்.
இதேபோல், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா மைசூரு ராஜேந்திரா நகர் பகுதியில் திறந்த வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201805051945408526_2_rajnath-2._L_styvpf.jpg)
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலபுராகி பகுதியில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
#Karnatakaelections2018 #BJPtopleaders
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)