என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிபாட புத்தகம் வாங்க சென்றபோது சுற்றுலா பஸ் மோதி கைக்குழந்தையுடன் தாய் பலி
Byமாலை மலர்4 May 2018 8:48 AM GMT (Updated: 4 May 2018 8:48 AM GMT)
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பள்ளிபாட புத்தகம் வாங்க மொபட்டில் சென்ற போது சுற்றுலா பஸ் மோதிய விபத்தில் தாய் மற்றும் 6 மாத கைக்குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நாரான்கோடு பகுதியை சேர்ந்தவர் அன்சாத். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அன்சாத்தின் மனைவி நிசிதா (வயது 27). இவரது மூத்த மகள் அமனபாத்திமா (3), 2-வது மகள் 6 மாத கைக்குழந்தை நிதாபாத்திமா.
நேற்று மாலை மூத்தமகளுக்கு பள்ளி பாடப்புத்தகம் வாங்க மாமனார் முகமது அலியுடன் மொபட்டில் சென்றார். தன்னுடன் 2 மகள்களையும் அழைத்துச்சென்றார்.
மொபட் வழிக்கடவு என்ற இடத்தில் வந்தபோது திருச்சூரில் இருந்து கர்நாடகாவுக்கு சுற்றுலா பஸ் வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மொபட் மீது பஸ் வேகமாக மோதியது.
இதில் மொபட்டில் சென்ற 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தாய் நிசிதா, 6 மாத கைக்குழந்தை நிதாபாத்திமா ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய முகமது அலி, மூத்த மகள் அமனபாத்திமா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நிலம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழிக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நாரான்கோடு பகுதியை சேர்ந்தவர் அன்சாத். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அன்சாத்தின் மனைவி நிசிதா (வயது 27). இவரது மூத்த மகள் அமனபாத்திமா (3), 2-வது மகள் 6 மாத கைக்குழந்தை நிதாபாத்திமா.
நேற்று மாலை மூத்தமகளுக்கு பள்ளி பாடப்புத்தகம் வாங்க மாமனார் முகமது அலியுடன் மொபட்டில் சென்றார். தன்னுடன் 2 மகள்களையும் அழைத்துச்சென்றார்.
மொபட் வழிக்கடவு என்ற இடத்தில் வந்தபோது திருச்சூரில் இருந்து கர்நாடகாவுக்கு சுற்றுலா பஸ் வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மொபட் மீது பஸ் வேகமாக மோதியது.
இதில் மொபட்டில் சென்ற 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தாய் நிசிதா, 6 மாத கைக்குழந்தை நிதாபாத்திமா ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய முகமது அலி, மூத்த மகள் அமனபாத்திமா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நிலம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழிக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X