என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஷூ அணியக் கூடாது, அரைக்கை சட்டை மட்டுமே அணியவேண்டும் - நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டுப்பாடு
Byமாலை மலர்19 April 2018 8:49 AM GMT (Updated: 19 April 2018 8:49 AM GMT)
நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு ஆடைக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை சி.பி.எஸ்.இ. விதித்துள்ளது. #NEETexam #CBSE #dresscode
புதுடெல்லி:
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் பொது நுழைவுத் தேர்வு மே 6ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதில், மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் ஆடைக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலின்படி, தேர்வு எழுத வரும் மாணவர்கள் வெளிர் நிற அரைக்கை ஆடைகளையே உடுத்த வேண்டும். ஷூ அணியக் கூடாது. பெரிய பட்டன்கள் வைத்த ஆடைகளை அணியக் கூடாது. பேட்ஜ்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அணிந்து வரக் கூடாது. குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்பு, சாண்டல்ஸ் அணியலாம்.
தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு மையத்திற்குள் எடுத்து வரக் கூடாது. ஜியோமெட்ரி அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் இதர உலோகப் பொருட்கள் ஆகியவற்றையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நீட் தேர்வின் போது அறிவுறுத்தப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த ஆண்டு முன்கூட்டியே ஆடை கட்டுப்பாட்டு விதிகளை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #NEETexam #CBSE #dresscode
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் பொது நுழைவுத் தேர்வு மே 6ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதில், மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் ஆடைக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலின்படி, தேர்வு எழுத வரும் மாணவர்கள் வெளிர் நிற அரைக்கை ஆடைகளையே உடுத்த வேண்டும். ஷூ அணியக் கூடாது. பெரிய பட்டன்கள் வைத்த ஆடைகளை அணியக் கூடாது. பேட்ஜ்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அணிந்து வரக் கூடாது. குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்பு, சாண்டல்ஸ் அணியலாம்.
தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு மையத்திற்குள் எடுத்து வரக் கூடாது. ஜியோமெட்ரி அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் இதர உலோகப் பொருட்கள் ஆகியவற்றையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நீட் தேர்வின் போது அறிவுறுத்தப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த ஆண்டு முன்கூட்டியே ஆடை கட்டுப்பாட்டு விதிகளை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #NEETexam #CBSE #dresscode
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X